ஆயுத யுத்தம் முடிவுற்ற பின் கலை இலக்கியங்கள் மௌனித்துள்ளது! பொ. ஐங்கரநேசன் ஆதங்கம்

Sri Lankan Tamils Tamils Government Of Sri Lanka
By Kajinthan Oct 08, 2025 07:13 AM GMT
Report

போராட்டக் காலத்தில் மக்களை எழுச்சி கொள்ள வைத்த கலை, இலக்கியங்கள் இப்போது ஊமையாக இருப்பது வருத்தமளிக்கிறது என தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவரும், 'வேர்முகங்கள்' நூலின் ஆசிரியருமான பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

வேர்முகங்கள்' நூலின் அறிமுகவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை (05.10.2025) முள்ளியவளை பரி-மத்தியா ஆலய மண்டபத்தில் நடைபெற்ற போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,தமிழ்த்தேசிய விடுதலைப் போராட்டத்தின் ஆயுதப் போராட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதே தவிர, தமிழ்த்தேசிய விடுதலைப் போராட்டம் முடிவுக்கு வரவில்லை.

எண்பது மில்லியனுக்கு விற்கப்பட்ட நாடாளுமன்ற ஆசனம்

எண்பது மில்லியனுக்கு விற்கப்பட்ட நாடாளுமன்ற ஆசனம்

போராட்டங்கள்

போராட்டம் முளை கொண்டதற்கான காரணங்கள் இப்போதும் அப்படியே நீடிக்கும்போது, போராட்டம் முடிவுக்கு வர இயலாது. அது சாத்தியமான வழிகளில் எல்லாம் ஜனநாயகப் போராட்டமாகத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லப்படவேண்டும்.

துரதிர்ஷ்டவசமாக, இப்போராட்டங்கள் இன்று அரசியல் வாதிகளுக்குரிய ஒரு பணி என்பதாக மாத்திரமே சுருங்கிப் போயுள்ளது.

ஆயுத யுத்தம் முடிவுற்ற பின் கலை இலக்கியங்கள் மௌனித்துள்ளது! பொ. ஐங்கரநேசன் ஆதங்கம் | It S Sad That Literature Is So Dumb Now

ஆயுதப் போராட்டத்தின் முடிவுடன் தமது பேனாக்களை மூடி வைத்துள்ள கலை, இலக்கியவாதிகள் ஜனநாயகப் போராட்டக்காலத்திலும் தமது பணிகளைத் தொய்வின்றித் தொடரவேண்டும்.

போராட்டக்காலத்தில் பேசாமடந்தைகளாக இருந்த பலர் இப்போது தமிழ்த்தேசிய வாதத்தைக் கேள்விக்குள்ளாக்கத் தலைப்பட்டுள்ளனர்.

இலங்கையில் ஒரே நாளில் அதிரடியாக கைது செய்யப்பட்ட 5,364 பேர்

இலங்கையில் ஒரே நாளில் அதிரடியாக கைது செய்யப்பட்ட 5,364 பேர்

தமிழ்த்தேசிய உணர்வு

இலங்கையில் இடதுசாரிகள் தலைமையிலான அரசாங்கம் அமைந்துள்ள நிலையில் அவர்கள் உயிர்பெற்றுள்ளனர்.

ஆயுத யுத்தம் முடிவுற்ற பின் கலை இலக்கியங்கள் மௌனித்துள்ளது! பொ. ஐங்கரநேசன் ஆதங்கம் | It S Sad That Literature Is So Dumb Now

போருக்குப் பின்னரான எமது இளைய தலைமுறையைத் தமிழ்த்தேசிய உணர்வில் இருந்தும் மடைமாற்றி, பெருந்தேசிய வாதத்துக்குள் கரைக்கும் நிகழ்ச்சிநிரலை தெரிந்தோ தெரியாமலோ முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், எமது போராட்டத்தின் நியாயங்களை, போரில் பெற்ற வெற்றிகளை, பட்ட வதைகளை எமது இளைய தலைமுறைக்கு எடுத்துச் சொல்லுவது வரலாற்றுக் கடமையாகும்.அதை எமது கலைஞர்களும் இலக்கியவாதிகளும் செய்ய முன்வரவேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

மின் கட்டண திருத்தம் குறித்து இன்று முக்கிய நகர்வு

மின் கட்டண திருத்தம் குறித்து இன்று முக்கிய நகர்வு

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US