தமது வரவு செலவு திட்டத்தில் ஊழல் செய்தோரை தண்டிப்பதாக ஜனாதிபதி குறிப்பிடவில்லை:அனுர குற்றச்சாட்டு

Anura Kumara Dissanayaka Ranil Wickremesinghe Sri Lanka Politician Sri Lanka World Bank
By Sivaa Mayuri Nov 23, 2022 09:52 AM GMT
Sivaa Mayuri

Sivaa Mayuri

in அரசியல்
Report

தமது வரவு செலவு திட்டத்தில் ஊழல்களை தடுப்பதாக கூறியுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஊழல் செய்தோரை தண்டிப்பதாக குறிப்பிடவில்லை என்று தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.

அவ்வாறு ரணில் கூறவேண்டுமாக இருந்தால், முதலில் சுயமாக தாமே வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்று சிறைச்சாலையில் பயன்படுத்தும் காற்சட்டையை அணிந்து கொண்டு, "மத்திய வங்கி ஊழலுக்காக நான் பொறுப்பேற்று இங்கு வந்துள்ளேன். எனவே ஊழல்களில் ஈடுபடுவோருக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும்" என்று கூறவேண்டியிருக்கும் என்று அநுரகுமார தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஊழல்

தமது வரவு செலவு திட்டத்தில் ஊழல் செய்தோரை தண்டிப்பதாக ஜனாதிபதி குறிப்பிடவில்லை:அனுர குற்றச்சாட்டு | It Does Not Mention Punishing The Corrupt

அமைச்சர் சிறிபால டி சில்வா கையூட்டல் கோரியதாக ஜப்பானிய அரசாங்கம் முறையிட்டமைக் காரணமாக அவரை கோட்டாபய ராஜபக்ச பதவியில் இருந்து நீக்கினார்.

எனினும் ரணில் விக்ரமசிங்க, குற்றம் சுமத்தப்பட்ட, நிமல் சிறிபால டி சில்வாவின் பரிந்துரையில் முன்னாள் நீதிபதி குசலா சரோஜினி வீரவர்த்தனவை நியமித்து, விசாரணையை மேற்கொண்டார்.

இந்த விசாரணையின்போது, நிமால் சிறிபால டி சில்வா மீதான குற்றச்சாட்டு தொடர்பில் முறைப்பாடுகள் இல்லையென்று முன்னாள் நீதிபதி குறிப்பிட்டதாக அனுரகுமார தெரிவித்தார்.

அனுரகுமார இந்தக் கருத்துக்களை வெளியிட்டபோது பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச, சபையில் இல்லாதோரின் பெயர்களை குறிப்பிட்டு பேசுவது தொடர்பில் கவனம் செலுத்தவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இதனையடுத்து, முன்னாள் நீதிபதியை குசலா அல்லது சரோ என்று அழைக்கலாமா? என்று அநுரகுமார கேள்வி எழுப்பினார். எனினும் அவரைப் பற்றி தாம் கூறவில்லை. நிமால் சிறிபால டி சில்வாவை பற்றி குறிப்பிடுவதாக அஜித் ராஜபக்ச தெரிவித்தார்.

இதனை ஆச்சரியமாக எடுத்துக்கொண்ட அனுரகுமார, அவருக்கு என்ன பெயரை தம்மால் கூறமுடியும். அவருக்கு பல பெயர்கள் உள்ளனவே என்று குறிப்பிட்டார்.

ரணில் விக்ரமசிங்க சபையில் இருந்தால், நல்லாட்சி அரசாங்க காலத்தில் அவர், பில்லியன் கணக்கான பணம் துபாய் வங்கியில் இருப்பதாக கூறப்பட்ட முறைப்பாட்டுக்காக ஜே.சி.வெலியமுன, ரவி வித்தியாலங்கார மற்றும் தில்ரூக்ஷி ஆகியோரை அனுப்பிய பின்னர் என்ன நடந்தது என்று கேட்டிருக்க முடியும் என்று அனுரகுமார தெரிவித்தார்.

எனவே ஊழல்வாதிகளின் தயவில் இருந்து கொண்டு ஊழல்வாதிகளுக்கு தண்டனை வழங்குவதாக ரணில் கூறமுடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை வெள்ளைக்காரர்களை தெரியும் என்பதால், ரணிலை நம்பி, வெளிநாடுகள் இலங்கைக்கு உதவிகளை வழங்கப்போவதில்லை. நாட்டின் நன்மதிப்பை பொறுத்தே அந்த நாடுகள் உதவிகளை வழங்குகின்றன.

ரணில் விக்ரமசிங்க தனிப்பட்ட செல்வாக்கை பயன்படுத்தி உதவிகளை பெற்றுக்கொள்ள முடியாது.

சர்வதேசத்தில் நிலவும் அபிப்பிராயமாகும்

தமது வரவு செலவு திட்டத்தில் ஊழல் செய்தோரை தண்டிப்பதாக ஜனாதிபதி குறிப்பிடவில்லை:அனுர குற்றச்சாட்டு | It Does Not Mention Punishing The Corrupt

பங்களாதேஷிடம் இருந்து 200 மில்லியன் டொலர்களை பெற்ற இலங்கை அதனை திருப்பிச்செலுத்த இரண்டு தடவைகளாக கால நீடிப்பை பெற்றது. எனினும் அந்த நாட்டின் பிரதமர், இலங்கை குறித்த நிதியை, திருப்பிச் செலுத்த வேண்டும் என்று உறுதியான கோரிக்கையை தற்போது விடுத்துள்ளார்.

இதுவே இன்று இலங்கை தொடர்பாக வெளிநாடுகள் மத்தியில் இருக்கும் நன்மதிப்பாகும்.

யூரியாவை வழங்கிய உலக வங்கி, ஊழல் இடம்பெறக்கூடாது என்பதற்காக கண்காணிப்பை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளது. உலகில் எங்கெல்லாம் ஊழல் இடம்பெறுகிறதோ அங்கெல்லாம் இலங்கையர் ஒருவர் தொடர்புபட்டிருக்கிறார்.

இதுவே இன்று இலங்கை தொடர்பில் சர்வதேசத்தில் நிலவும் அபிப்பிராயமாகும். இதனை கருத்திற்கொண்டே, நாடுகள் இலங்கைக்கு உதவியளிக்க முன்வரும். இதனைவிடுத்து ரணிலுக்காக எந்த நாடும் உதவியளிக்காது என்று அனுரகுமார குறிப்பிட்டுள்ளார்.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உரும்பிராய், London, United Kingdom, Toronto, Canada

25 Apr, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, உரும்பிராய்

24 Apr, 2024
மரண அறிவித்தல்

சுழிபுரம் மேற்கு, London, United Kingdom

21 Apr, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, துணுக்காய், மல்லாவி

24 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நல்லூர், மதுரை, தமிழ்நாடு, India

25 Mar, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், சாவகச்சேரி, கொழும்பு

22 Apr, 2024
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு

24 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, வவுனியா, போரூர், India

19 Apr, 2014
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், Newbury Park, United Kingdom

26 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, வவுனியா

26 Apr, 2014
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Surrey, United Kingdom

24 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கொழும்பு

21 Apr, 2024
மரண அறிவித்தல்

சுதுமலை, மாத்தளை, Scarborough, Canada

16 Apr, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சூரிச், Switzerland, கனடா, Canada

06 May, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Chevilly Larue, France

07 May, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, மெல்போன், Australia

21 Apr, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், கோண்டாவில், Mississauga, Canada

22 Apr, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

20 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vancouver, United States

19 Apr, 2024
மரண அறிவித்தல்

மந்துவில், மானிப்பாய், கந்தர்மடம், கொழும்பு, Burlington, Canada

20 Apr, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

19 Apr, 2024
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US