பாலஸ்தீனிய மாணவியை நாடுகடத்த திட்டமிடும் பிரித்தானியா
இஸ்ரேல் மீது ஹமாஸ்(israel-hamas) நடத்திய தாக்குதல் குறித்து கருத்து வெளியிட்ட பாலஸ்தீனிய மாணவியை பிரித்தானியா நாடுகடத்த திட்டமிடுவதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஆண்டு, ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி, ஹமாஸ் ஆயுதக்குழுவினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி 1,200க்கும் அதிகமான இஸ்ரேலியர்களைக் கொன்றதற்கு மறுநாள், பிரித்தானியாவிலுள்ள மான்செஸ்டர்(Manchester) பல்கலையில் சட்டம் பயிலும் பாலஸ்தீனிய மாணவியான டானா (Dana Abuqamar, 19), பாலஸ்தீன ஆதரவு பேரணி ஒன்றில் கலந்துகொண்டார்.
இதன்போது அந்தப் பேரணியில் உரையாற்றிய அவர், நடந்த விடயத்தால் நாங்கள் மகிழ்ச்சியில் திளைத்துள்ளோம் என்று கூறியுள்ளார்.
காசா தாக்குதல்
''நவயுக வரலாற்றில், முதன்முறையாக இப்படி நடந்துள்ளது. 16 ஆண்டுகளாக காசா தாக்குதலுக்குள்ளாகிவருகிறது. முதன்முறையாக அவர்கள் எதிர் நடவடிக்கையில் இறங்கியுள்ளார்கள்.
இது ஒரு வாழ்நாள் அனுபவம். இஸ்ரேல் எப்படி பதிலடி கொடுக்கும் என்ற பயம் எங்களுக்கு உள்ளது. அதே நேரத்தில். நாங்கள் மிகவும் கௌரவமாக உணர்கிறோம். நடந்ததை அறிந்து முழு மகிழ்ச்சியில் திளைக்கிறோம்." என கூறியுள்ளார்.
டானாவின் கருத்துக்களுக்காக அவரது மாணவர் விசாவை இரத்து செய்துள்ள பிரித்தானிய உள்துறை அலுவலகம், அவரால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று அறிவித்துள்ளதுடன், அவரை நாடுகடத்தவும் திட்டமிட்டுவருவதாக கூறப்படுகிறது.
அரசின் நடவடிக்கைகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள டானா,
''தனது வார்த்தைகள் தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. பிரித்தானியா அரசு தனது மனித உரிமைகளை மீறிவிட்டது. தான் எந்த தவறும் செய்யவில்லை.
ஒரு 19 வயது வயது மாணவியான தான் பள்ளிக்குச் செல்வது, சமூக நீதிக்காக குரல் கொடுப்பது, எனது சமுதாயத்துக்கு மதிப்புமிக்க ஒருவராக இருக்க முயல்வது தவிர வேறொன்றும் செய்யவில்லை. தன்னை பிரித்தானிய அரசு தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று கூறுவது அடிப்படையற்ற வாதம்." என கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 25ம் நாள் - கொடியிறக்கம்





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 2 நாட்கள் முன்

சூப்பர் சிங்கர் போட்டியாளருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய் ஆண்டனி... சந்தோஷத்தில் போட்டியாளர், வீடியோ Cineulagam
