இஸ்ரேல் - லெபனான் மோதல்: இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் வெளியான தகவல்

Israel Lebanon Foreign Employment Bureau Ministry of Foreign Affairs - sri lanka
By Dhayani Oct 30, 2024 03:48 PM GMT
Report

மத்திய கிழக்கு நாடுகளில் இடம்பெற்றுவரும் யுத்த நிலை காரணமாக அங்குள்ள இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்பு இல்லையென தகவல் கிடைத்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பொது முகாமையாளர் சீ. சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் புதன்கிழமை (30) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

யுவதியொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு அதிதீவிர சிகிச்சைப்பிரிவில்: காதலன் கைது

யுவதியொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு அதிதீவிர சிகிச்சைப்பிரிவில்: காதலன் கைது

 

இஸ்ரேல் - லெபனான் மோதல்: இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் வெளியான தகவல் | Israel Lebanon Conflict Protection Of Sri Lankans

இலங்கையர்களின் பாதுகாப்பு

மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள இலங்கையர்கள் நாட்டுக்கு வரவேண்டிய தேவை ஏற்பட்டால் அவர்களை நாட்டுக்கு அழைத்துவரம் நடவடிக்கை எடுப்போம்.

மத்திய கிழக்கு நாடுகளில் குறிப்பாக இஸ்ரேல், லெபனான் நாடுகளுக்கிடையில் இடம்பெற்று வரும் மோதல் காரணமாக அங்கு தொழிலுக்கு சென்றிருக்கும் இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் நாங்கள் தொடர்ந்து எமது தூதரங்களுடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

இலங்கையர்கள் யாருக்கும் இதுவரை எந்த பாதிப்பும் இல்லை என்ற எமக்கு தகவல் கிடைத்திருக்கிறது. அதேநேரம் அவர்களில் யாருக்கும் இதுவரை நாட்டுக்கு திரும்பவேண்டி தேவையும் ஏற்படவில்லை. அவ்வாறு தேவை ஏற்பட்டால், அவர்களை நாட்டுக்கு அழைத்து வரவும் நாங்கள் நடவடிக்கை எடுப்போம்.

இதேவேளை, லெபனானில் 7ஆயிரம் இலங்கையர்கள் உள்ள நிலையில், இந்த வருடம் ஒக்டோபர் 29ஆம் திகதிவரை 1116 பேர் லெபனானுக்கு தொழில் நிமித்தம் சென்றுள்ளனர். 

இஸ்ரேல் - லெபனான் மோதல்: இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் வெளியான தகவல் | Israel Lebanon Conflict Protection Of Sri Lankans

இஸ்ரேலுக்கு தொழிலுக்கு அனுப்பும் நடவடிக்கை

மேலும் யுத்த நிலைமை காரணமாக இலங்கையர்களை லெபனானுக்கு அனுப்பும் நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளது. அதேநேரம் இஸ்ரேலிலும் யுத்தம் இடம்பெறும் நிலையில், நாடு வழமைபோன்று செயற்படுவதனால் இஸ்ரேலுக்கு தொழிலுக்கு அனுப்பும் நடவடிக்கை இடம்பெற்று வருகிறது.

இதேவேளை, வெளிநாடுகளில் தொழில் புரியும் இலங்கையர்கள் நாட்டுக்கு டொலர் அனுப்புவதை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு பல்வேறு நிவாரண திட்டங்கள் கடந்த காலங்களில் அறிமுகப்படடுத்தப்பட்டிருந்தன. தொழில் அமைச்சுடன் இணைந்தே இது செயற்பட்டு வந்தது.

இஸ்ரேல் - லெபனான் மோதல்: இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் வெளியான தகவல் | Israel Lebanon Conflict Protection Of Sri Lankans

இதன்போது அவர்கள் நாட்டுக்கு வரும்போது அவர்களுக்கு வாகன அனுமதி பத்திரம், காப்புறுதி திட்டம் என பல திட்டங்கள் செயற்படடுத்தப்பட்டிருந்தன. ஆனால் தற்போது அந்த வேலைத்திட்டம் நிறுத்தப்பட்டிருக்கின்றன.

குறிப்பாக வாகனம் இறக்குமதி செய்வது தடைசெய்யப்பட்டிருந்த சந்தர்ப்பத்திலேயே வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு இந்த நிவாரணம் வழங்கப்பட்டிருந்தது.

அத்துடன் அவர்களுக்கு ஓய்வூதிய திட்டம் தொடர்பில் நடவடிக்கை எடுக்கபட்படிருந்தன. அதனை எவ்வாறு செயற்படுத்துவது என்ற நடவடிக்கை தற்போது கலந்துரையாடப்பட்டு வருகின்றது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அரச ஊழியர்களுக்கு 25 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு! ஆட்சி மாற்றத்தால் ஏற்பட்ட நிலை

அரச ஊழியர்களுக்கு 25 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு! ஆட்சி மாற்றத்தால் ஏற்பட்ட நிலை

இலங்கைக்கு வருவதற்கு விமான நிலையத்தில் காத்திருந்த பெண் மரணம்

இலங்கைக்கு வருவதற்கு விமான நிலையத்தில் காத்திருந்த பெண் மரணம்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW


31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
மரண அறிவித்தல்

காலி, London, United Kingdom

07 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, Toronto, Canada

10 Mar, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US