இஸ்ரேல் - லெபனான் மோதல்: இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் வெளியான தகவல்

Israel Lebanon Foreign Employment Bureau Ministry of Foreign Affairs - sri lanka
By Dhayani Oct 30, 2024 03:48 PM GMT
Report

மத்திய கிழக்கு நாடுகளில் இடம்பெற்றுவரும் யுத்த நிலை காரணமாக அங்குள்ள இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்பு இல்லையென தகவல் கிடைத்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பொது முகாமையாளர் சீ. சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் புதன்கிழமை (30) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

யுவதியொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு அதிதீவிர சிகிச்சைப்பிரிவில்: காதலன் கைது

யுவதியொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு அதிதீவிர சிகிச்சைப்பிரிவில்: காதலன் கைது

 

இஸ்ரேல் - லெபனான் மோதல்: இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் வெளியான தகவல் | Israel Lebanon Conflict Protection Of Sri Lankans

இலங்கையர்களின் பாதுகாப்பு

மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள இலங்கையர்கள் நாட்டுக்கு வரவேண்டிய தேவை ஏற்பட்டால் அவர்களை நாட்டுக்கு அழைத்துவரம் நடவடிக்கை எடுப்போம்.

மத்திய கிழக்கு நாடுகளில் குறிப்பாக இஸ்ரேல், லெபனான் நாடுகளுக்கிடையில் இடம்பெற்று வரும் மோதல் காரணமாக அங்கு தொழிலுக்கு சென்றிருக்கும் இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் நாங்கள் தொடர்ந்து எமது தூதரங்களுடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

இலங்கையர்கள் யாருக்கும் இதுவரை எந்த பாதிப்பும் இல்லை என்ற எமக்கு தகவல் கிடைத்திருக்கிறது. அதேநேரம் அவர்களில் யாருக்கும் இதுவரை நாட்டுக்கு திரும்பவேண்டி தேவையும் ஏற்படவில்லை. அவ்வாறு தேவை ஏற்பட்டால், அவர்களை நாட்டுக்கு அழைத்து வரவும் நாங்கள் நடவடிக்கை எடுப்போம்.

இதேவேளை, லெபனானில் 7ஆயிரம் இலங்கையர்கள் உள்ள நிலையில், இந்த வருடம் ஒக்டோபர் 29ஆம் திகதிவரை 1116 பேர் லெபனானுக்கு தொழில் நிமித்தம் சென்றுள்ளனர். 

இஸ்ரேல் - லெபனான் மோதல்: இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் வெளியான தகவல் | Israel Lebanon Conflict Protection Of Sri Lankans

இஸ்ரேலுக்கு தொழிலுக்கு அனுப்பும் நடவடிக்கை

மேலும் யுத்த நிலைமை காரணமாக இலங்கையர்களை லெபனானுக்கு அனுப்பும் நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளது. அதேநேரம் இஸ்ரேலிலும் யுத்தம் இடம்பெறும் நிலையில், நாடு வழமைபோன்று செயற்படுவதனால் இஸ்ரேலுக்கு தொழிலுக்கு அனுப்பும் நடவடிக்கை இடம்பெற்று வருகிறது.

இதேவேளை, வெளிநாடுகளில் தொழில் புரியும் இலங்கையர்கள் நாட்டுக்கு டொலர் அனுப்புவதை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு பல்வேறு நிவாரண திட்டங்கள் கடந்த காலங்களில் அறிமுகப்படடுத்தப்பட்டிருந்தன. தொழில் அமைச்சுடன் இணைந்தே இது செயற்பட்டு வந்தது.

இஸ்ரேல் - லெபனான் மோதல்: இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் வெளியான தகவல் | Israel Lebanon Conflict Protection Of Sri Lankans

இதன்போது அவர்கள் நாட்டுக்கு வரும்போது அவர்களுக்கு வாகன அனுமதி பத்திரம், காப்புறுதி திட்டம் என பல திட்டங்கள் செயற்படடுத்தப்பட்டிருந்தன. ஆனால் தற்போது அந்த வேலைத்திட்டம் நிறுத்தப்பட்டிருக்கின்றன.

குறிப்பாக வாகனம் இறக்குமதி செய்வது தடைசெய்யப்பட்டிருந்த சந்தர்ப்பத்திலேயே வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு இந்த நிவாரணம் வழங்கப்பட்டிருந்தது.

அத்துடன் அவர்களுக்கு ஓய்வூதிய திட்டம் தொடர்பில் நடவடிக்கை எடுக்கபட்படிருந்தன. அதனை எவ்வாறு செயற்படுத்துவது என்ற நடவடிக்கை தற்போது கலந்துரையாடப்பட்டு வருகின்றது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அரச ஊழியர்களுக்கு 25 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு! ஆட்சி மாற்றத்தால் ஏற்பட்ட நிலை

அரச ஊழியர்களுக்கு 25 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு! ஆட்சி மாற்றத்தால் ஏற்பட்ட நிலை

இலங்கைக்கு வருவதற்கு விமான நிலையத்தில் காத்திருந்த பெண் மரணம்

இலங்கைக்கு வருவதற்கு விமான நிலையத்தில் காத்திருந்த பெண் மரணம்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW


1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, சுவிஸ், Switzerland

13 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முரசுமோட்டை, Pforzheim, Germany

13 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Zürich, Switzerland

13 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US