ஈரானின் 8 பாலங்கள் மீது இஸ்ரேல் நடத்திய அதிரடி தாக்குதல்!
ஈரான் பயன்படுத்தும் தொடருந்து பாதைகள் மற்றும் பாலங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளதாக இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
X தளத்தில் பகிரப்பட்ட ஒரு செய்தியில், "நேற்று நாங்கள் போக்குவரத்து விமானங்களையும் டஜன் கணக்கான ஹெலிகாப்டர்களையும் அழித்தோம்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
எட்டு பாலங்கள்
இன்று நாங்கள் புரட்சிகரப் பாதுகாப்புப் படையினர் பயன்படுத்திய தொடருந்து தண்டவாளங்களையும் பாலங்களையும் தாக்கினோம்.
இதற்கிடையில், ஈரானிய ஆயுதப் படைகள் பயன்படுத்தியதாகக் கூறப்படும் "எட்டு பாலப் பகுதிகள்" மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் (IDF) தெரிவித்துள்ளன.

தெஹ்ரான், கராஜ், தப்ரிஸ், காஷான் மற்றும் கோம் உள்ளிட்ட நகரங்களில் இந்தத் தாக்குதல்கள் நடைபெற்றதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படை (IDF) தெரிவித்துள்ளது.
"உங்கள் பாதுகாப்பிற்காக" ஈரான் மக்கள் தொடருந்துகளில் பயணிக்க வேண்டாம் என இஸ்ரேல் எச்சரித்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, காஷானில் உள்ள ஒரு பாலத்தின் மீதான தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டதாக ஈரான் அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
இதைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அமெரிக்காவின் போர் நிறுத்த முன்மொழிவை நிராகரித்துள்ள ஈரான்! போரை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டுவர அழைப்பு