மத்திய கிழக்கில் போர் பதற்றம் தீவிரம்: தெஹ்ரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
லெபனானின் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள மூன்று பகுதிகளில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, ஈரானின் தலைநகர் தெஹ்ரானை குறிவைத்து புதிய தாக்குதல்கள் தொடங்கியுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் அறிவித்துள்ளது.
தொடரும் தாக்குதல்
வளைகுடா பிராந்தியத்திலும் அதற்கு அப்பாலும் ஏவுகணை மற்றும் ஆளில்லா விமான (ட்ரோன்) தாக்குதல்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. இதன் பின்னணியில், கட்டார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் குவைத் ஆகிய நாடுகள் இடைமறிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், ஈரானில் உள்ள ஒரு ஆரம்பப் பள்ளி மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு அமெரிக்காவே பொறுப்பு என அம்னெஸ்டி இன்டர்நேஷனல் நடத்திய விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
அந்த தாக்குதலில் குறைந்தது 170 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் பள்ளி மாணவிகள் என தெரியவந்துள்ளது.
இஸ்ரேலிய படைகளுடன் மோதிய ஹிஸ்புல்லா போராளிகள்
அமெரிக்கா-இஸ்ரேல் மோதலில் தங்களுக்கு இணையும் திட்டம் இல்லை என ஜெர்மனி அறிவித்துள்ளது. மேலும், European Union நாடுகள் ஹோர்முஸ் ஜலசந்தியில் தடையற்ற கப்பல் போக்குவரத்தை உறுதி செய்ய படைகளை அனுப்ப விருப்பமில்லை என ஐரோப்பாவின் வெளியுறவு கொள்கைத் தலைவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், "எங்கள் எதிரிகளுக்கு அணுகலை முடக்கியுள்ளோம்" என ஈரான் தெரிவித்துள்ளது. இந்த பதற்றநிலைக்கிடையில், லெபனானில் பல வாரங்களாக நீடித்த குண்டுவீச்சுகளைத் தொடர்ந்து, இஸ்ரேல் தனது வடக்கு அண்டை நாடான லெபனானுக்கு தரைப்படைகளை அனுப்பியுள்ளது.
தெற்கு லெபனானில் ஹிஸ்புல்லா போராளிகள், இஸ்ரேலிய படைகளுடன் கடுமையான மோதல்களில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
லண்டனை உலுக்கிய சம்பவத்தில் புதிய திருப்பம்... தாக்குதலில் ஈடுபட்டவர் மீது கொலை முயற்சி வழக்கு News Lankasri
புதிய அமைதி பேச்சுவார்த்தையை முன்மொழிந்துள்ள ஈரான்., நம்பிக்கையின்மையை வெளிப்படுத்திய அமீரகம் News Lankasri
அடுத்த கட்டத்திற்கு நகரும் ஈரான் போர்... இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்ட 6,500 டன் வெடிமருந்துகள் News Lankasri