இலங்கை இருளில் மூழ்குவதன் பின்னணியில் நடக்கும் சதி அம்பலம்
ஊழல் நிறைந்த சமகால அரச துறைக்குள் பல்வேறு மாபியாக்கள் செயற்பட்டு வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளன.
இலங்கையில் அமுலாகும் மின்சார துண்டிப்பின் பின்னணியில் இவ்வாறான குழுக்கள் செயற்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நீர்த்தேக்கங்களின் நீர் வெளியேற்றம்

அண்மையில் ரந்தெனிகல, ரந்தம்பே நீர்த்தேக்கங்களின் நீரை மின் உற்பத்திக்காக பயன்படுத்தாது அதனை சட்டவிரோதமான முறையில் வெளியேற்றியதன் பின்னணியில் மாபியா குழுக்கள் உள்ளதாக தெரிய வந்துள்ளது. இது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள், நீர்த்தேக்கத்திற்குப் பொறுப்பான இரண்டு நபர்களிடம் வாக்குமூலங்களைப் பெற்றுள்ளார்கள்.
கடந்த 8ம் திகதி பகல் 12.00 மணி முதல் 9ம் திகதி பிற்பகல் 2.00 மணி வரை இந்த நீர்த்தேக்கங்களின் நீர் வெளியேற்றப்பட்டிருக்கிறது.
162 மில்லியன் ரூபாவுக்கு நடந்தது என்ன?

இந்தக் காலப்பகுதியில் தனியார் நிலக்கரி மின்நிலையங்களிலிருந்து மின்சாரத்தைப் பெற்றுக் கொள்வதற்காக 162 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் சுட்டிக்காட்டியுள்ளார்கள்.
நீரை வெளியேற்றி தனியாரிடமிருந்து மின்சாரத்தைக் கொள்வனவு செய்யும் நடவடிக்கை மின்சார சபையின் அதிகாரிகளின் தேவைக்கமைய இடம்பெற்றதா? என்பது பற்றி அதிகாரிகள் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
128 ஆண்டுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் - ஆனால் பாகிஸ்தான், இலங்கைக்கு வாய்ப்பில்லை News Lankasri
மீண்டும் சன் டிவி சீரியலில் என்ட்ரி கொடுத்த பாண்டவர் இல்லம் சீரியல் வேதநாயகி... எந்த தொடர்? Cineulagam
பழனிவேலா இது, இப்படியொரு காரியத்தை செய்துவிட்டார், பாண்டியன் என்ன செய்வார்... பாண்டியன் ஸ்டோர்ஸ் அடுத்த கதைக்களம் Cineulagam
நடிகர் நெப்போலியன் வீட்டில் விசேஷம்! மகன் தனுஷ் - அக்ஷயா தம்பதிக்கு குவியும் வாழ்த்துக்கள் Manithan
க்ரிஷுடன் அமர்ந்து ரோஹினி திதி கொடுப்பதை நேரில் பார்த்த மீனா, அடுத்த நொடியே செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam