விமானப் பயணங்களுக்காக திறக்கப்பட்ட ஈரானின் வான்வெளிகள்
ஈரானின் மத்திய மற்றும் மேற்குப் வான்வெளி, சர்வதேச விமானப் பயணங்களுக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
ஈரான் இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு இடையே மோதல் போக்கு உருவானதையடுத்து, ஜூன் 13ஆம் திகதி ஈரான் தனது வான்வெளியை மூடியது.
இரண்டு நாடுகளுக்கும் இடையே இடம்பெற்ற 12 நாட்கள் மோதலையடுத்து, இரு தரப்பிற்கும் இடையே கடந்த செவ்வாய்க்கிழமை(24) போர் நிறுத்தம் எட்டப்பட்டது.
மதிப்பீடுகள்
இந்நிலையில், விமானப் பயணத்துடன் தொடர்புடைய அதிகாரிகளின் மதிப்பீடுகள் நிறைவடைந்ததை அடுத்து, ஈரான் தனது வான்வெளியை திறக்க தீர்மானித்துள்ளது.
முன்னதாக, ஈரானின் கிழக்குப் பகுதி வான்வெளியை உள்நாட்டு, சர்வதேச மற்றும் கடந்து செல்லும் விமானங்களுக்காக ஈரான் திறந்துவிட்ட போதிலும், வடக்கு, தெற்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் உள்ள ஈரானிய விமான நிலையங்களில் இருந்து எந்த விமானமும் தரையிறங்குவதற்கான அல்லது புறப்படுவதற்கான அனுமதி வழங்கப்படவில்லை.
குறித்த பகுதிகள் ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் நேரம் 2 மணி வரை மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வரலாற்று சிறப்பு மிக்க களுதாவளை பிள்ளையாருக்கு எதிராக நடந்த பெரும் சதியில் சிக்கிய முக்கிய புள்ளிகள்!
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 21 மணி நேரம் முன்

ஏர் கனடா விமான சேவை திடீர் ரத்து: பாதிப்பில் 130,000 பயணிகள்! பணியாளர்களின் கோரிக்கை என்ன? News Lankasri

ஈஸ்வரியை சீக்ரெட்டாக வந்து சந்தித்த நபர், பிரச்சனையில் சிக்கப்போகும் குணசேகரன்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

அமைதிப் பேச்சுவார்த்தையை முடக்கினால்... கடுமையான விளைவுகள்: எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப் News Lankasri
