அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலளிக்கும் ஈரான்! தயாராகும் ராஜதந்திர பேச்சுவார்த்தை
அமெரிக்காவின் சமீபத்திய இராணுவ தாக்குதல்களால் தங்கள் அணுசக்தி தளங்கள் பாதிக்கப்பட்டதை அடுத்து, ஈரான் 'ராஜதந்திரத்தின் தர்க்கத்திற்கு' திரும்புமாறு சர்வதேச சமூகத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
இந்நிலையில் ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி, அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளுக்கு தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.
ஆனால் இராணுவ நடவடிக்கைகள் மற்றும் பயங்கரவாத செயல்கள் பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் என்று எச்சரித்துள்ளார்.
ஒப்பந்தத்திற்கு எதிரான நிலைப்பாடு
ஈரானின் இந்த அழைப்பு, ட்ரம்ப் அடுத்த வாரம் ஈரானுடன் முன்னெடுக்கப்படவுள்ள பேச்சுவார்த்தை அறிவிப்பு வெளியான நிலையில் ஈரான் தனது நிலைபாட்டை அறிவித்துள்ளது.
இதன்படி ஓமானில் மறைமுக பேச்சுவார்த்தைகள் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது,
ஆனால் ட்ரம்பின் ஒப்பந்தத்திற்கு எதிரான நிலைப்பாடு மற்றும் ஈரானின் உறுதியான இராஜதந்திர அழைப்பு ஆகியவை பேச்சுவார்த்தைகளில் பதற்றத்தை ஏற்படுத்தலாம்.
ஈரான், பேச்சுவார்த்தைகள் மூலம் பிராந்திய ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்க முயல்கிறது. ஆனால் அமெரிக்காவின் இராணுவ முன்னுரிமைகள் மற்றும் பென்டகனின் மாறுபட்ட மதிப்பீடுகள் இந்த முயற்சிகளை சிக்கலாக்கலாம்.
இதற்கமைய இந்த பேச்சுவார்த்தைகள் மீதான சர்வதேச கவனத்தையும், ஈரானின் அணுசக்தி திறன் குறித்து தொடர்ந்து நிலவும் நிச்சயமற்ற தன்மையையும் எடுத்துக்காட்டுகின்றன.

புதிய அரசியல் ஒழுங்கில் புவிசார் அரசியல் யுத்தங்கள் 22 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் Amazon - 40 பில்லியன் பவுண்டு முதலீடு News Lankasri

Record Breaking வியாபாரம் ஆனது ரஜினியின் கூலி படம்... யார் எத்தனை கோடிக்கு வாங்கியுள்ளார்கள் தெரியுமா? Cineulagam
