போரில் வரலாற்று வெற்றியை அறிவித்த ஈரான்!
அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகளுக்கு எதிரான போரில் "வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி" கிடைத்திருப்பதாக ஈரானின் உயர் தேசியப்பாதுகாப்பு கவுன்சில் அறிவித்துள்ளது.
இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
இலங்கையின் முக்கிய வங்கியில் பாரிய உள்மோசடி! சிக்கிய பலர் - வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்
வரலாற்று சிறப்புமிக்க படுதோல்வி
குறிப்பாக, "ஈரானிய தேசத்திற்கு எதிரான கோழைத்தனமான, சட்டவிரோதமான மற்றும் குற்றவியல் போரில், எதிரி மறுக்க முடியாத, வரலாற்றுச் சிறப்புமிக்க மற்றும் படுதோல்வியை சந்தித்தது" என்றும் குறிப்பிட்டுள்ளது.

போரின் மூலம் ஈரான் அடையவிருந்த அனைத்து நோக்கங்களும் நிறைவேற்றப்பட்டுவிட்டது. குற்றவாளியான அமெரிக்காவை தனது 10 அம்சத் திட்டத்தை ஏற்கும்படி கட்டாயப்படுத்தியதன் மூலம் ஈரான் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை அடைந்துள்ளது.
மேலும் ஹோர்முஸ் நீரிணை மீதான ஈரானின் கட்டுப்பாடு, உரிமை, அனைத்து தடைகளையும் நீக்குதல் ஆகியவற்றை அமெரிக்கா ஏற்றுக்கொண்டுள்ளது.
சேதங்களுக்கு இழப்பீடு வழங்கவும், பிராந்தியத்திலிருந்த தங்கள் படைகளை திரும்பப் பெறவும் அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளது. சுமார் ஒரு மாத காலத்துக்கும் மேலாக அமெரிக்கா போர் நிறுத்தத்துக்கு அழுத்தம் கொடுத்தது.
ஆனால், நாங்கள் மீண்டும் மீண்டும் காலக்கெடுவை நிராகரித்தோம். போரின் ஏறக்குறைய அனைத்து நோக்கங்களும் நிறைவேற்றப்பட்டுவிட்டன எனும் நற்செய்தியை ஈரானுக்கு நாங்கள் அளிக்கிறோம்.இன்னும் போர் முடியவில்லை. வரிகளை நீக்குதல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை அமெரிக்கா ஏற்றால் மட்டுமே போர் முடிவுக்கு வரும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரக்தியில் வீழ்ந்த எதிரி
கடந்த 40 நாட்களில், லெபனான், ஈராக், யேமன் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனியப் பகுதிகளில் உள்ள துணிச்சலான எதிர்ப்புப் போராளிகளுடன் இணைந்து, எதிரிக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க அடிகளை நாங்கள் கொடுத்தோம்.வரலாற்றுப் போருக்குப் பிறகு மனிதகுலத்தின் மிக மோசமான எதிரிகளுக்கு மறக்க முடியாத ஒரு பாடத்தை வழங்கியுள்ளன.

நாங்கள் அவர்களின் படைகள், வசதிகள், உள்கட்டமைப்பு மற்றும் அரசியல், பொருளாதார, தொழில்நுட்ப, இராணுவச் சொத்துக்களை முற்றிலுமாக அழித்தோம். இதன் விளைவாக, எதிரி விரக்தியில் வீழ்ந்துவிட்டான்.
மாபெரும் ஈரானிய மக்களின் விருப்பத்திற்கும் உன்னதமான ‘எதிர்ப்புக்கு முன் சரணடைவதைத் தவிர வேறு வழியைக் காணவில்லை.” என்றும் அறிவித்துள்ளது.
இரண்டு வார கால போர் நிறுத்தத்தை மேற்கொண்ட அமெரிக்காவும் ஈரானும், இந்த போரில் தங்களுக்கு ‘வெற்றி’ கிடைத்ததாக கூறிவருகின்றது.
பேச்சுவார்த்தை நடத்த ஈரான் திட்டம்
இரு தரப்பினரும் வெற்றியை வலியுறுத்தினாலும், போர் நிறுத்தத்தின் விவரங்கள் மற்றும் செயல்படுத்தல் குறித்து நிச்சயமற்ற தன்மைகள் நீடிக்கின்றன.

ஒப்பந்தத்தின் விவரங்களை இறுதி செய்வது குறித்து பாகிஸ்தானின் தலைநகரான இஸ்லாமாபாத்தில் 10ஆம் திகதி பேச்சுவார்த்தை நடத்த ஈரான் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
முழுமையான போர் நிறுத்தத்தை நோக்கமாகக் கொண்ட நேரடிப் பேச்சுவார்த்தைகளுக்கு அமெரிக்கா தயாராக தொடங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.