விமான பயணிகளின் இரகசியத்தரவுகள் கசிவு: ட்ரம்ப் ஆட்சியில் சிக்கலில் சட்டவிரோத குடியேறிகள்
ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றது முதல் பெப்ரவரி 2026 வரையிலான காலக்கட்டத்தில், அமெரிக்க விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளிடமிருந்து பெறப்பட்ட இரகசிய தகவல்களின் அடிப்படையில் 800க்கும் மேற்பட்டோரை குடிவரவு மற்றும் சுங்கத்துறையினர் (ICE) அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகம் (TSA), சுமார் 31,000 பயணிகளின் விரிவான தரவுகளை குடிவரவுச் சட்ட அமுலாக்கத்திற்காக 'ஐஸ்' (ICE) அமைப்புடன் பகிர்ந்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் ஆய்வு செய்த உள்நாட்டுத் தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.
தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல்
தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள மட்டுமே உருவாக்கப்பட்ட இந்தத் தகவல் பகிர்வு முறை, தற்போது ட்ரம்ப்பின் "பாரிய நாடுகடத்தல்" (Mass Deportation) திட்டத்தின் ஒரு பகுதியாக, சாதாரண குடிவரவு விதிமீறல்களைக் கண்டறியப் பயன்படுத்தப்படுவது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, 2007-ல் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக உருவாக்கப்பட்ட 'செக்யூர் பிளைட் புரோகிராம்' (Secure Flight Program) என்ற திட்டத்தின் கீழ் சேகரிக்கப்படும் பயணிகளின் தகவல்கள், இப்போது குடிவரவு குற்றவாளிகளைக் கண்காணிக்கப் பயன்படுத்தப்படுகின்றன.
இது குறித்து அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை (DHS) நேரடியான விளக்கங்களை அளிக்க மறுத்துவிட்டாலும், ட்ரம்ப் நிர்வாகத்தின் கீழ் ஒட்டுமொத்த அமைப்பின் பாதுகாப்பு மற்றும் செயல்திறனை மேம்படுத்தும் முயற்சிகளில் டி.எஸ்.ஏ (TSA) ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
விமான நிலையங்களுக்குள் எத்தனை கைதுகள் நடந்தன என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், ஒரு நபர் எப்போது பயணம் செய்கிறார் என்பதை கண்டறிய இந்த தரவுகள் அதிகாரிகளுக்குப் பெரிதும் உதவியுள்ளன.இந்த விவகாரம் அமெரிக்க அரசியலில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெப்ரவரி மாதம் முதல் குடிவரவு ஒடுக்குமுறை
பெப்ரவரி மாதம் முதல் குடிவரவு ஒடுக்குமுறைக்கான கூடுதல் நிதி ஒதுக்கீடு தொடர்பாக ஜனநாயகக் கட்சியினருக்கும் குடியரசுக் கட்சியினருக்கும் இடையே நிலவும் மோதலால், உள்நாட்டுப் பாதுகாப்புத் துறைக்கான நிதி மசோதா முடங்கியுள்ளது.
இதன் விளைவாக, விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளுக்கு ஊதியம் வழங்கப்படாத சூழல் நிலவியது. இதனைத் தொடர்ந்து, கடந்த மார்ச் மாதம் பாதுகாப்புப் பணிகளுக்கு உதவ ஒரு டஜனுக்கும் மேற்பட்ட விமான நிலையங்களில் 'சுங்க' (ICE) அதிகாரிகளை ட்ரம்ப் பணியமர்த்தினார்.
இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள ஜனநாயகக் கட்சியினர், விமான நிலையங்களில் இத்தகைய அதிகாரிகளின் இருப்பு பயணிகளிடையே தேவையற்ற குழப்பத்தையும் அச்சத்தையும் உருவாக்கும் என்று உள்துறைச்செயலருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கான அனைத்து வழிகளையும் மூடியதாக அறிவித்த ஈரான்- பதற்றத்தில் உலகம் News Lankasri
வீட்டைவிட்டு வெளியேறுவது குறித்து நிலா சொன்ன பதில், சேரன், சோழன் செய்தது என்ன?... அய்யனார் துணை சீரியல் Cineulagam