ஈரான் அதிகாரி வெளியிட்ட கணித சூத்திரம்.. சர்வதேச பரப்பில் ஏற்பட்டுள்ள குழப்பநிலை
ஹோர்முஸ் நீரிணையை முடக்குவோம் என்ற ட்ரம்பின் எச்சரிக்கைக்கு, ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் விடுத்துள்ள விசித்திரமான கணித எச்சரிக்கை உலக நாடுகளைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
இந்த கணித சூத்திரமானது, சர்வதேசத்தில் ஏற்படவுள்ள மிக மோசமான எண்ணெய் விலை உயர்வை காட்டும் வகையில் உள்ளது என சர்வதேச நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
ஈரான் சபாநாயகர் தனது 'X' தளத்தில், "ΔO_BSOH>0 ⇒ f(f(O))>f(O) " என்ற சூத்திரத்தைப் பகிர்ந்துள்ளார்.
ஹோர்முஸ் நீரிணை மீதான தடையின் தீவிரம் அதிகரிக்கும் போது ($\Delta O_{BSOH}>0$), அதனால் ஏற்படும் எண்ணெய் விலை உயர்வு சாதாரணமானதாக இருக்காது.
கணித சூத்திரம்..
அது "கூட்டு விளைவாக" (Compounding Effect) பாரிய அளவில் எகிறும் ($f(f(O))>f(O)$) என்பதை அவர் இதன் மூலம் குறிப்பிட்டுள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
Enjoy the current pump figures. With the so-called 'blockade', Soon you'll be nostalgic for $4–$5 gas.
— محمدباقر قالیباف | MB Ghalibaf (@mb_ghalibaf) April 12, 2026
ΔO_BSOH>0 ⇒ f(f(O))>f(O) pic.twitter.com/rVxlC6vFWG
தற்போது அமெரிக்காவில் 4 முதல் 5 டொலராக இருக்கும் பெட்ரோல் விலையை மக்கள் இனி 'மிஸ்' செய்வார்கள் என்றும், விரைவில் பெட்ரோல் விலை கட்டுக்கடங்காமல் உயரும் என்றும் அவர் கிண்டலடித்துள்ளார்.
இஸ்லாமாபாத்தில் நடந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, இன்று மாலை முதல் ஈரானின் அனைத்து துறைமுகங்களையும் முற்றுகையிட அமெரிக்க கடற்படைக்கு ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
இதற்கிடையில், ட்ரம்பின் இந்த உத்தரவு வெளியான சில நிமிடங்களிலேயே சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 8 சதவீதம் வரை உயர்ந்து, ஒரு பீப்பாய் 104 டொலரைத் தாண்டியுள்ளது.
சர்வதேச பரப்பில் அச்சம்..
ஆசியப் பங்குச்சந்தைகளான ஜப்பானின் நிக்கி (Nikkei) மற்றும் தென்கொரியாவின் கோஸ்பி (Kospi) ஆகியன சரிவைச் சந்தித்துள்ளன.

ஈரானிய துறைமுகங்களுக்குள் நுழையும் அல்லது வெளியேறும் எந்தவொரு நாட்டு கப்பலையும் அமெரிக்க மத்திய கட்டளை (CENTCOM) தடுத்து நிறுத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் மற்றும் ஈரானிய பிரதிநிதிகளுக்கு இடையே பாகிஸ்தானில் நடந்த பேச்சுவார்த்தையில், அமெரிக்காவின் "சிவப்பு கோடுகளை" ஏற்க ஈரான் மறுத்துவிட்டது.
இதனால் லெபனான் போர் நிறுத்தம் மற்றும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு ஆகிய விவகாரங்களில் எட்டப்பட்ட தற்காலிக அமைதி இப்போது சீர்குலைந்துள்ளது.
அமெரிக்காவின் இந்த முற்றுகை நடவடிக்கைக்கு ஈரான் பதிலடி கொடுத்தால், அது ஒரு நேரடிப் போராக மாறக்கூடும் என சர்வதேச அரசியல் அவதானிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
YOU MAY LIKE THIS VIDEO