இறுதிப் போரின் போது தமிழர்களை அழிப்பதற்கு துணை நின்ற ஈரான்-இஸ்ரேல்
2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இறுதியுத்தத்தில் பல இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்படுவதற்கு இஸ்ரேலும் ஈரானும் அரச பயங்கரவாதத்திற்கு துணை நின்றவர்கள் என்பதனை நாங்கள் மறக்க மாட்டோம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம்(19) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
“இன்று அந்தநிலையை அவர்கள் அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள்.
ஆனாலும் அந்த யுத்தத்தை நிறுத்துவதற்கு மற்றைய நாடுகளுடன் இணைந்து இலங்கை அரசாங்கமும் ஒத்துழைக்க வேண்டும்.
இஸ்ரேல்-ஈரான் தாக்குதலின் காரணமாக இலங்கையின் பொருளாதாராத்தில் பாரிய தாக்கம் ஏற்படவுள்ளது” என குறிப்பிட்டார்.
'வித் லவ்' படம் பார்த்துவிட்டு ரஜினிகாந்த் சொன்ன விமர்சனம்.. படம் எப்படி வந்துள்ளது தெரியுமா Cineulagam
பிரித்தானிய சுற்றுலாப்பயணிகள் இருவரை உடனடியாக நாட்டை விட்டு வெளியேற அறிவுறுத்திய இந்தியா News Lankasri