உலக நாடுகளுக்கு அதிர்ச்சி கொடுக்கும் ஈரானின் அதிரடி முடிவு!
உலக கச்சா எண்ணெய் போக்குவரத்தின் முக்கிய பங்காக உள்ள ஹார்முஸ் நீரிணையை மூட ஈரான் முடிவு செய்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், ஹார்முஸ் நீரிணையை மூட ஈரான் நாடாளுமன்றமும் அனுமதி அளித்துள்ளது.
எரிபொருள் விலை
உலகம் முழுவதுக்குமான 20% கச்சா எண்ணெய் இந்த நீரிணை வழியேதான் பல்வேறு பகுதிகளுக்கு கப்பலில் கொண்டு செல்லப்படுவதால், கச்சா எண்ணெய் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
எனவே கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால் பெட்ரோல், டீசல், விலைகளும் உயர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் - இஸ்ரேல் போர்
கடந்த இரண்டு வாரங்களாக ஈரான் - இஸ்ரேல் நாடுகள் மோதலில் ஈடுபட்டு வருகின்றன.
இதனிடையே, அமெரிக்க இராணுவம், ஈரானின் ஃபோர்டோ (Fordow), இஸ்ஃபஹான் (Isfahan) மற்றும் நடான்ஸ் (Natanz) அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
இதனடிப்படையிலேயே, ஈரான், உலக கச்சா எண்ணெய் போக்குவரத்தின் முக்கிய பங்காக உள்ள ஹார்முஸ் நீரிணையை மூட முடிவு செய்துள்ளது.