கட்டாரில் நடந்த தாக்குதல்.. பயணிகள் குறித்து கட்டார் ஏர்வேய்ஸ் வெளியிட்டுள்ள தகவல்!
அமெரிக்காவுக்கு பதிலடி வழங்கும் முகமாக கட்டாரில் உள்ள அமெரிக்க விமான தளம், ஈரானால் தாக்கப்பட்ட போது இடைநிறுத்தப்பட்ட விமானங்களில் இருந்த பயணிகள் 24 மணிநேரத்திற்குள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்டார் ஏர்வேய்ஸ் விமான நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பத்ர் முகமது அல்-மீர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
ஏவுகணைத் தாக்குதல்
கட்டார் ஏர்வேய்ஸ் கட்டாரில் உள்ள அமெரிக்க விமானப்படை தளத்தின் மீது ஈரான், பதிலடி ஏவுகணைத் தாக்குதலை நடத்தியது.
இதன்போது, சேவையில் இருந்த விமானங்கள் திருப்பி விடப்பட்ட நிலையில், அவற்றில் இருந்த அனைத்து பயணிகளும் 24 மணி நேரத்திற்குள் அனுப்பி வைக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், விமான மாற்றுப்பாதையால் மொத்தம் சுமார் 20,000 பயணிகள் பாதிக்கப்பட்டதாக அவர் ஒரு அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |