40 ஆண்டுகளில் முதல்முறையாக அலி கமெனி செய்த செயல்! மத்திய கிழக்கை சூளும் போர் பதற்றம்..
ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமெனி, கடந்த நாற்பது ஆண்டுகளாக தொடர்ந்து கலந்து கொண்டு வந்த விமானப்படை தளபதிகளுடனான ஆண்டு கூட்டத்தை இந்த ஆண்டு முதன்முறையாக தவிர்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனால், ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் பல்வேறு ஊகங்கள் எழுந்துள்ளன.
40 வருடத்தில் முதல்முறை
இந்த நிகழ்வு, அமெரிக்கா வளைகுடா (Gulf) பிராந்தியத்தில் தனது இராணுவ இருப்பை அதிகரித்து வரும் நேரத்தில் நிகழ்ந்துள்ளது.
இதனால், இரு நாடுகளுக்கிடையே மோதல் தீவிரமடையலாம் என்ற அச்சம் உருவாகியுள்ளது.

1989ஆம் ஆண்டு ஈரான் உச்ச தலைவராக பொறுப்பேற்றதிலிருந்து, பிப்ரவரி 8 அன்று நடைபெறும் இந்த கூட்டத்தில் அலி கமெனி ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் கலந்து கொண்டுள்ளார்.
அதனால், இந்த ஆண்டு அவர் பங்கேற்காதது மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த ஆண்டு கூட்டம், ஈரான் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தாக பார்க்கப்படுகின்றது.
1979ஆம் ஆண்டு இஸ்லாமிய புரட்சியின் போது, விமானப்படை அதிகாரிகள் குழு, இஸ்லாமிய குடியரசின் நிறுவனர் அயதுல்லா அலி கமேனிக்கு விசுவாசம் தெரிவித்த நிகழ்வை பெப்ரவரி 8 நினைவுகூருகிறது.
கொரோனா தொற்று காலம்
இந்த நிகழ்வே பஹ்லவி அரச வம்சத்தின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.
அதன்பிறகு, ஒவ்வொரு ஆண்டும் இந்த நாளில் விமானப்படை தளபதிகள், நாட்டின் மதத் தலைமைத்துடன் சந்தித்து வந்தனர்.
கடந்த நான்கு தசாப்தங்களாக, கொரோனா தொற்று காலத்திலும் கூட, கமெனெி இந்த கூட்டத்தில் தொடர்ந்து கலந்து கொண்டார்.

ஆனால், இந்த ஆண்டு அவர் அந்த நிகழ்வில் பங்கேற்கவில்லை. அதற்கு பதிலாக, ஈரான் ஆயுதப்படைகளின் தலைமை தளபதி அப்துல்ரஹீம் மூசாவி, விமானப்படை தளபதிகளை ஞாயிற்றுக்கிழமை சந்தித்துள்ளார்.
இந்த அசாதாரண மாற்றம், பாதுகாப்பு காரணங்களால் காமெனி பொதுவெளியில் தோன்றுவதை தவிர்த்திருக்கலாம், அல்லது முக்கிய தேசிய விவகாரங்களில் கவனம் செலுத்தி வரலாம் என்ற ஊகங்களுக்கு வழிவகுத்துள்ளது.
கமெனி கூட்டத்தை தவிர்த்தது, தெஹ்ரான்–வொஷிங்டன் உறவுகள் கடும் பதற்றத்தில் உள்ள நேரத்தில் நிகழ்ந்துள்ளது.
மோதல் தீவிரம்
அமெரிக்கா, வளைகுடா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கூடுதல் கடற்படை மற்றும் விமானப்படை வளங்களை நிலைநிறுத்தி வருகிறது.
இதற்கு பதிலளித்த ஈரான், அமெரிக்கா எந்தவொரு இராணுவ நடவடிக்கையையும் தொடங்கினால், அது முழு மத்திய கிழக்கு பிராந்தியத்திலும் பரவக்கூடிய போராக மாறும் என்று பலமுறை எச்சரித்துள்ளது.

முன்னதாக பிராந்திய மோதல்களில் சமாதான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் இன்னும் முடிவுக்கு வரவில்லை.
அமெரிக்கா, ஈரானின் ஏவுகணை திட்டத்தையும் பேச்சுவார்த்தையில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறது. அதே நேரத்தில், அணு திட்டம் மட்டுமே பேச்சுவார்த்தை பொருளாக இருக்க வேண்டும் என ஈரான் தெரிவித்து வருகிறது.
பரஸ்பர எச்சரிக்கை
இந்த கருத்து வேறுபாடுகள், இரு தரப்புகளிடையே தொடர்ச்சியான பதற்றத்தையும், பரஸ்பர எச்சரிக்கைகளையும் உருவாக்கியுள்ளது.
காமெனி இந்த ஆண்டு கூட்டத்தில் பங்கேற்காததற்கான அதிகாரப்பூர்வ காரணம் இதுவரை அறிவிக்கப்படவில்லை. இருப்பினும், நிகழ்ந்த நேரம் மற்றும் சூழ்நிலை காரணமாக, பார்வையாளர்களிடையே பல கேள்விகள் எழுந்துள்ளன.

சிலர், இது பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் அதிகரித்ததன் விளைவாக இருக்கலாம், அல்லது ஈரான் தலைமையின் உள்ளக மூலோபாயத் திட்டமிடலுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என கருதுகின்றனர்.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இராணுவ நகர்வுகள் தொடரும் நிலையில், தூதரக மோதல்களும் நீடித்து வருகின்றன. இந்த சூழலில், அதீத முக்கியத்துவம் கொண்ட ஒரு நிகழ்வில் காமெனி பங்கேற்காததது , பிராந்தியத்தின் எதிர்கால பாதை குறித்து மேலும் உறுதியற்ற நிலையை உருவாக்கியுள்ளது.