இந்தியாவுடன் விளையாடுமா பாகிஸ்தான்! முன்வைக்கப்பட்டுள்ள 3 முக்கிய கோரிக்கைகள்..
2026 T20 உலகக்கோப்பை தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியை புறக்கணிப்பதாக அறிவித்திருந்த பாகிஸ்தான் கிரிக்கெட் சபை (PCB), அந்த முடிவில் மாற்றம் செய்யும் வாய்ப்பை பரிசீலிக்க, சர்வதேச கிரிக்கெட் சபை (ICC) உடன் உயர் மட்ட பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.
,இந்தியாவுக்கு எதிராக விளையாடும் முடிவில் மாற்றம் செய்ய வேண்டுமெனில், ,சர்வதேச கிரிக்கெட் சபையிடம் மூன்று முக்கிய கோரிக்கைகளை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை முன்வைத்துள்ளது.
3 கோரிக்கைகள்
பெப்ரவரி 15ஆம் திகதி நடைபெறவுள்ள இந்தியா–பாகிஸ்தான் T20 உலகக்கோப்பை போட்டி திட்டமிட்டபடி நடைபெற வேண்டும் என்ற நோக்கில், பாகிஸ்தான் கிரிக்கெட் சபை உறுப்பினர்கள் மற்றும் பங்களாகதேச கிரிக்கெட் சபைத் தலைவர் அமினுல் இஸ்லாம் புல்புல் ஆகியோர், ICC பிரதிநிதிகளுடன் லாகூரில் சந்தித்தனர்.
இந்த பேச்சுவார்த்தையில், சர்வதேச கிரிக்கெட் சபையின் CEO சஞ்சோக் குப்தா Zoom வழியாக கலந்துகொண்டார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தலைவர் மொஹ்சின் நக்வி, ICC துணைத் தலைவர் இம்ரான் க்வாஜா மற்றும் BCB தலைவர் அமினுல் இஸ்லாம் புல்புல் ஆகியோர் நேரில் பங்கேற்றனர்.
வெளியாகியுள்ள தகவலின்படி, இந்தியாவுக்கு எதிரான போட்டியை புறக்கணிக்கும் முடிவை மாற்ற PCB, ICCக்கு கீழ்கண்ட மூன்று கோரிக்கைகளை முன்வைத்துள்ளது.
ICC வருமானத்தில் அதிக பங்கு
இந்தியாவுடன் இருதரப்பு கிரிக்கெட் தொடரை மீண்டும் தொடங்குதல்
கை குலுக்கும் (Handshake) நெறிமுறையை கட்டாயமாக நடைமுறைப்படுத்தல்
சர்ச்சையின் பின்னணி
பாகிஸ்தான் அரசு, நடுநிலை மைதானத்தில் போட்டி நடத்தப்பட இருந்த போதிலும், இந்தியாவுக்கு எதிராக விளையாட அனுமதி இல்லை என அதிகாரப்பூர்வமாக அறிவித்ததுடன் இந்த சர்ச்சை தொடங்கியது.

ஷெபாஸ் ஷரீஃப் தலைமையிலான அரசு, இந்த புறக்கணிப்புக்கான காரணங்களை தெளிவாக விளக்கவில்லை. கிரிக்கெட் உலகில் நிலவிய பொதுவான கருத்து என்னவெனில், ICC வங்கதேசத்தின் கோரிக்கையை நிராகரித்ததைத் தொடர்ந்து, அந்த நாட்டுடன் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் பாகிஸ்தான் இந்த நிலைப்பாட்டை எடுத்ததாக கருதப்பட்டது.
பாதுகாப்பு காரணங்களை முன்வைத்து, இந்தியாவில் நடைபெறவிருந்த போட்டிகளை மாற்ற வங்கதேசம் கோரியிருந்தது.
சர்ச்சையை கிளப்பியுள்ள எப்ஸ்டைன் கோப்புகள்! 169 முறை இடம்பெற்றுள்ள தலாய் லாமாவின் பெயர்- வெளியாகியுள்ள அறிக்கை
பாகிஸ்தானின் ஆயுதம்
இந்த மூன்று கோரிக்கைகளின் மூலம், PCB, ICC மீது அழுத்தம் செலுத்த முயல்கிறது என்பதே வெளிப்படையாக தெரிகிறது.
இந்தியா–பாகிஸ்தான் போட்டி நடைபெறாவிட்டால், ஒளிபரப்பு வருமானத்தில் பெரிய இழப்பு ஏற்படும் என்பதால், அதனை ஒரு ஆயுதமாக PCB பயன்படுத்துகிறது.

தற்போது, ICC வருமான விநியோகத்தில் பாகிஸ்தான் நான்காவது இடத்தில் உள்ளது.
PCBக்கு கிடைக்கும் பங்கு: 5.75% ஆண்டுக்கு கிடைக்கும் வருமானம் (2023): USD 34.51 மில்லியன் இந்த தொகை பாகிஸ்தானின் கிரிக்கெட் கட்டமைப்பை இயக்க மிக முக்கியமானதாகும்.
PCBயை விட கிரிக்கெட் அவுஸ்திரேலியா – USD 128 மில்லியன், இங்கிலாந்து & வேல்ஸ் கிரிக்கெட் சபை – USD 139 மில்லியன், BCCI (இந்தியா) – USD 293 மில்லியன் அதிக வருமானம் பெறுகின்றன.
இந்தியாவுடன் இருதரப்பு கிரிக்கெட்டை மீண்டும் தொடங்க வேண்டும் என்பது PCBயின் இரண்டாவது கோரிக்கை. ஆனால், இது இரு நாடுகளின் அரசுகளின் முடிவாகும், ICCக்கு இதில் எந்த சட்ட அதிகாரமும் இல்லை.
அதிகபட்சமாக, ICC ஒரு நடுநிலையாளராக மட்டுமே செயல்பட முடியும்.
கை குலுக்கும் நெறிமுறை
மூன்றாவது கோரிக்கை, 2025 ஆசியக் கோப்பையில் நடந்த சம்பவத்தின் பின்னணியில் உள்ளது.

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு, தேசிய உணர்வுகளையும் எல்லை தாண்டிய தீவிரவாதத்தையும் காரணமாக காட்டி, இந்திய அணி, பாகிஸ்தான் வீரர்கள் மற்றும் உதவி பணியாளர்களுடன் கை குலுக்க மறுத்தது.
அதன் தொடர்ச்சியாக, கை குலுக்கும் நெறிமுறையை கட்டாயப்படுத்த வேண்டும் என PCB வலியுறுத்தியுள்ளது.
விந்தணுக்கள் மூலம் Super Race மனித இனத்தை உருவாக்க திட்டமிட்ட எப்ஸ்டீன்: வெடித்துள்ள புதிய சர்ச்சை News Lankasri
டாடி மம்மி பாடல் புகழ் முமைத் கானை நினைவிருக்கா.. கோமாவில் இருந்தவர் 7 வருடமாக படும் துயரம் Cineulagam