ஐபிஎல் 2025 தொடர்: ஏலப்பட்டியலில் 29 இலங்கை வீரர்கள்
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் பதிவுகள் 2024 நவம்பர் 4ஆம் திகதியுடன் அதிகாரப்பூர்வமாக முடிவடைந்ததாக பிசிசிஐ(BCCI) அறிவித்துள்ளது.
இதன்படி 1,165 இந்தியர்கள் மற்றும் 409 வெளிநாட்டு வீரர்கள் என்ற அடிப்படையில் 1574 வீரர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதில் வெளிநாட்டு வீரர்களாக, 29 இலங்கை வீரர்களும் காணப்படுகின்றனர்.
வீரர்களின் ஏலம்
இதனை தவிர ஆப்கானிஸ்தானின் 29 பேரும்,அவுஸ்திரேலியாவின் 76 பேரும், பங்களாதேஸின் 13 பேரும், கனடாவின் 3 பேரும், இங்கிலாந்தின் 52 பேரும் உள்ளடங்குகின்றனர்.

அத்துடன், அயர்லாந்தின் 9 பேரும் இத்தாலியின் 1 வீரரும், நெதர்லாந்தின் 1 வீரரும் , நியூஸிலாந்தின் 39 பேரும், ஸ்கொட்லாந்தின் 2 பேரும், தென்னாபிரிக்காவின் 91 பேரும், ஐக்கிய அரபு இராச்சியத்தின் 1 வீரரும், அமெரிக்காவின் 10 பேரும், மேற்கிந்திய தீவுகளின் 33 பேரும், சிம்பாப்வேயின் 8 பேரும் உள்ளடங்குகின்றனர்.
இந்தநிலையில், சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் நவம்பர் 24 மற்றும் 25 ஆகிய திகதிகளில் வீரர்களின் ஏலம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
மரண வீட்டில் அரசியல்.. 2 நாட்கள் முன்
ஜனனி சொன்ன விஷயம், குணசேகரனுக்கு எதிராக விசாலாட்சி இதை செய்வாரா?... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
தொடர் தோல்வி, ஆனாலும் முயற்சியை கைவிடாத ஷங்கர்.. ரூ. 1000 கோடியில் உருவாகும் பிரம்மாண்ட படம் Cineulagam
இந்தியாவுக்கு வரும் புடின்: விமானத்தில் கொண்டு வரப்பட்ட Aurus Senat கார்! மிரட்டும் தனித்துவம் News Lankasri