பங்களாதேஷ் வீரரின் பந்துவீச்சு முறை குறித்து வெளியிடப்பட்ட சந்தேகம்
பங்களாதேஷ் (Bangladesh) கிரிக்கெட் அணியின் அனைத்துத்துறை ஆட்ட வீரர் சகிப் அல் ஹசனின் (Shakib al Hasan) பந்து வீச்சு முறை குறித்து ஆய்வு செய்யுமாறு கோரப்பட்டுள்ளது.
இங்கிலாந்தின் கவுண்டி செம்பியன்சிப்பில் போட்டி தொடரில் சர்ரே அணியுடனான ஆட்டத்தின்போது, அவருடைய பந்து வீச்சு முறை குறித்து சந்தேகம் எழுப்பப்பட்டது.
சோதனைக்கு உட்படுத்தப்படுவதற்கான விவாதங்கள்
நடுவர்களால் இந்த சந்தேகம் எழுப்பப்பட்டதை அடுத்து, அவரது பந்துவீச்சு நடவடிக்கையை பகுப்பாய்வு செய்யுமாறு இங்கிலாந்து கிரிக்கட் சபை கோரிக்கை விடுத்துள்ளது.

37 வயதான பங்களாதேஷ் வீரர், இந்த கவுண்டி பருவத்தில் இதுவரை 11 விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளார்.
இந்தநிலையில் அவர், அடுத்து வரும் போட்டிகளில் விளையாடுவதில் இருந்து இடைநீக்கம் செய்யப்படவில்லை என்றாலும், அங்கீகரிக்கப்பட்ட வசதியில் மேலும் சோதனைக்கு உட்படுத்தப்படுவதற்கான விவாதங்கள் நடைபெற்று வருவதாக இங்கிலாந்து கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
இதன்படி பகுப்பாய்வு செயற்பாடுகள் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
| மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
இந்து சமுத்திரத்தில் டியாகோ காசியா தனது முக்கியத்துவத்தை இழக்கிறதா..! 23 மணி நேரம் முன்
மூன்று நாட்களுக்கான உணவை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல் News Lankasri
ரூ. 4000 கோடி பட்ஜெட் இராமாயணம் படத்திற்காக ஏ.ஆர்.ரகுமான் வாங்கும் சம்பளம்... இத்தனை கோடியா, அடேங்கப்பா... Cineulagam
48 மணி நேரத்தில் நரக மழை பொழியும் - ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri
ஈரானின் அபாயகரமான எதிரிகளின் பகுதியில் அற்புதமான மீட்பு நடவடிக்கை: மார்தட்டிக்கொண்ட ட்ரம்ப் News Lankasri