தேசபந்துவுக்கு கொலை மிரட்டல்: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு வந்துள்ள கொலை மிரட்டல் தொடர்பில் பூசா சிறைச்சாலையில் உள்ள இரண்டு சந்தேக நபர்களிடமிருந்து வாக்குமூலங்களைப் பெற கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுரவிடமிருந்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் உத்தரவு ஒன்றைப் பெற்றுள்ளது.
அதன்படி, பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தனது பதவியில் உத்தியோகபூர்வ கடமைகளைச் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் துறை இன்று (2) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
விசாரணைகள்
தேசபந்து தென்னகோனின் ஹோகந்தரவில் உள்ள வீட்டிற்குச் சென்ற இரண்டு மூத்த காவல்துறை அதிகாரிகள், பாதாள உலகக் குழு தலைவர் காஞ்சிபாணி இம்ரானிடமிருந்து அவருக்கு அச்சுறுத்தல்கள் வரக்கூடும் முன்னர் அறிவித்திருந்தனர்.
இந்த நிலையில், வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள காஞ்சிபாணி இம்ரான், தென்னகோனைக் கொலை செய்ய தனது நெருங்கிய கூட்டாளிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் மேலும் கூறியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 3 நாட்கள் முன்

நீச்சல் குளத்தில் நெருக்கமாக இருக்கும் ஹனிமூன் புகைப்படங்களை வெளியிட்ட பாவனி! வாயடைத்துப்போன ரசிகர்கள் Manithan

விருது வாங்க சென்ற இடத்தில் அஜித் மகனுக்கு அடித்த லக்.. குடியரசு தலைவருடன் லீக்கான புகைப்படம் Manithan
