கபிலவின் மர்ம மரணம்! மறுநாளே மகிந்தவின் கையில் கிடைத்த கடிதம்..
எயார்பஸ் விமானக் கொள்வனவு மோசடி தொடர்பான விசாரணைகளுக்காக, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை எதிர்வரும் 12ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முன்னிலையாகுமாறு இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அழைப்பாணை விடுத்துள்ளது.
மகிந்த ராஜபக்சவை மே 12 ஆம் திகதியன்று ஆணைக்குழுவில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்குமாறு கோரும் உத்தியோகபூர்வ கடிதம், நேற்று சனிக்கிழமை அவரது தங்காலை 'கார்ல்டன்' இல்லத்தில் வைத்து கையளிக்கப்பட்டது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுதிப்படுத்தியுள்ளது.
ஜோசப் விஜய் எனும் நான்.. ஆண்டவன் மீது ஆணையிட்டு.. உணர்ச்சி பொங்க முதலமைச்சர் பதவியை ஏற்றார் விஜய் LIVE
அவகாசம் கோரப்படுமா
கடந்த வாரமே முன்னாள் ஜனாதிபதிக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது என்று ஊடகங்களில் செய்திகள் கசிந்திருந்தாலும், நேற்று சனிக்கிழமைதான் உத்தியோகபூர்வ கடிதம் அவருக்குக் கிடைத்துள்ளது.
குறிப்பாக, எயார்பஸ் வழக்கின் பிரதான சாட்சியாளராகக் கருதப்பட்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேன மர்மமான முறையில் உயிரிழந்து அடுத்த நாள் இந்த அழைப்பாணை கடிதம் வந்துள்ளது.
கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பாக ராஜபக்ச குடும்பத்தினர் மற்றும் எதிர்த்தரப்பினர் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி வரும் நிலையில், நாட்டின் முன்னாள் ஜனாதிபதி ஒருவரை இலஞ்ச, ஊழல் தடுப்பு ஆணைக்குழு விசாரணைக்கு அழைத்துள்ளமை முக்கிய இராஜதந்திர நகர்வாகப் பார்க்கப்படுகின்றது.
நாளைமறுதினம் செவ்வாய்க்கிழமை மகிந்த ராஜபக்ச ஆணைக்குழுவில் முன்னிலையாவாரா அல்லது அவரது தரப்பில் கால அவகாசம் கோரப்படுமா என்பது குறித்த எதிர்பார்ப்பு நாடு முழுவதும் அதிகரித்துள்ளது.
அமெரிக்க தாக்குதலில் இருந்து தப்பிக்க... இரகசியமாக ஈரானுக்கு மிகப்பெரிய உதவி செய்த பாகிஸ்தான் News Lankasri
முதலமைச்சராக இருந்தாலும் இதுதான்... சங்கீதாவின் வளர்ப்புக்கு Royal salute! படுவைரலாகும் வீடியோ Manithan