மட்டக்களப்பு துப்பாக்கிச் சூட்டு சம்பவம்! - வியாழேந்திரனின் மெய்பாதுகாவலருக்கு விளக்கமறியல்
மட்டக்களப்பில் பொதுமகன் மீது துப்பாக்கி சூடு நடாத்திய சம்பவத்தில் கைதுசெய்யப்பட்ட இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் மெய்பாதுகாவலரை எதிர்வரும் 12ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் எ.சி.எம். றிஸ்வான் இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
கடந்த மாதம் 21ம் திகதி இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரனின் மெய்பாதுகாவர் பொதுமகன் மீது துப்பாக்கி சூடு நடாத்தியதில் 34 வயதுடைய மகாலிங்கம் பாலசுந்தரம் எனபவரே உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட மெய்பாதுகாவலர் விளக்கமறியலில் இருந்துவரும் நிலையில் இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் ஏ.சி.எம். றிஸ்வான் முன்னிலையில் வழக்கு விசரணைக்கு எடுக்கப்பட்டது.
இதன்போது குறித்த மெய்பாதுகாவலருக்கு கோவிட் தொற்று காரணமாக நீதிமன்றத்திற்கு அழைத்து வரமுடியாத நிலையில் இந்த வழக்கு விசாரணை இடம்பெற்றது.
இதன்போது குறித்த சந்தேகநபரான மெய்பாதுகாவலரை எதிர்வரும் 12ம் திகதி திங்கட்கிழமை வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.