சுற்றுலாவை மேம்படுத்த சர்வதேச தரத்தில் ஈர்ப்புகள் தேவை: அரசாங்கம்
கொழும்பில் புதிதாக திறக்கப்பட்டுள்ள "சிட்டி ஒஃப் ட்ரீம்ஸ்" உட்பட இலங்கையில் உள்ள கெசினோ சூதாட்ட நிலையங்கள் உள்ளூர் பிரஜைகளுக்கானது அல்லவெனவும், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை அதன் இலக்கு எனவும் சுற்றுலாத்துறை பிரதியமைச்சர் பேராசிரியர் ருவான் ரணசிங்க தெளிவுபடுத்தியுள்ளார்.
நேற்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
தெளிவான விதிமுறைகள்
அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த திட்டம் இலங்கையை ஒரு சிறந்த சுற்றுலா தலமாக முயற்சிகளின் ஒரு பகுதியாகும் எனவும், இத்தகைய சூதாட்ட நிலையங்களுக்கும் உள்ளூர் பிரஜைகளின் நுழைவை கட்டுப்படுத்த தெளிவான விதிமுறைகள் நடைமுறையில் உள்ளன எனவும் குறிப்பிட்டார்.
சுற்றுலா பயணிகள்
சுற்றுலாப் போக்குகளை எடுத்துரைத்த அவர், கொழும்பில் சுமார் 3500 விடுதிகள் உள்ளன. அவற்றில் 40 சதவீதமானவற்றுக்கே சுற்றுலா பயணிகள் செல்கின்றனர்.
எனவே, சுற்றுலாவை மேம்படுத்த சர்வதேச தரத்தில் ஈர்ப்புகள் தேவை எனவும் சுற்றுலாத்துறை பிரதியமைச்சர் பேராசிரியர் ருவான் ரணசிங்க வலியுறுத்தினார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் திடீர் மாற்றம்?... என்ன விஷயம் பாருங்க, ரசிகர்கள் வருத்தம் Cineulagam

விவாகரத்து சர்ச்சைக்கு பின்னர் புதிய தோற்றத்தில் ஆர்த்தி ரவி! எப்படி இருக்காங்கன்னு பாருங்க Manithan

சரிகமப சீசன் 5 போட்டியாளர் பாடிக்கொண்டிருக்கும் போதே அவரது வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகமான அரங்கம் Cineulagam

ரூ.30,000 கோடி மதிப்புள்ள சோனா குழுமம்: கொலை செய்யப்பட்டாரா சஞ்சய் கபூர்? கடிதத்தால் வெடித்த சர்ச்சை! News Lankasri

Ehirneechal: மருத்துவமனையில் உயிருக்கு போராடும் ஈஸ்வரி- மருத்துவர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல் Manithan
