சர்வதேச விளையாட்டுக்களில் பங்குபற்றிய இலங்கை அணிக்கு கௌரவிப்பு
2024ஆம் ஆண்டு சர்வதேச நாடுகள் பங்குபற்றிய ரோல் போல் விளையாட்டுப் போட்டியில் சாம்பியன் (Champion) பட்டத்தை பெற்ற இலங்கை அணியை கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இந்நிகழ்வானது, மன்னார் (Mannar) புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி தேசிய பாடசாலையில் நேற்று (19.05.2024) நடைபெற்றுள்ளது.
குறித்த விளையாட்டு போட்டிகள் கடந்த 11 மற்றும்12ஆம் திகதிகளில் கம்பஹா விமான நிலைய விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்றன.
ரோல் போல் விளையாட்டு
இதன்போது, ரோல் போல் விளையாட்டில் இலங்கை அணி சார்பாக பங்குகொண்ட மன்னார் மாவட்ட வீரர்களான மாணவர் மாணவிகளுக்கான பாராட்டு விழாவும் கௌரவிப்பு நிகழ்வுமே இடம்பெற்றுள்ளது.

அதேவேளை, ரோல் போல் விளையாட்டானது, இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டு முதல் முதலாக மன்னார் மாவட்டத்திலேயே இந்த விளையாட்டு குழு ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் மன்னார் மாவட்ட விளையாட்டு வீரர்கள் தேசிய மட்டத்திலும் சர்வதேச மட்டத்திலும் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.
இந்நிலையில், சர்வதேச ரோல் போல் விளையாட்டு எதிர்வரும் ஆண்டு மன்னார் மாவட்டத்தில் இடம்பெறவுள்ளதாக இலங்கை ரோல் போல் சம்மேளனத்தின் செயலாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
சூர்யா நிலைமையை பயன்படுத்தி சுந்தரவல்லி போட்ட கிரிமினல் பிளான், நந்தினி அதிரடி... மூன்று முடிச்சு புரொமோ Cineulagam
இந்தியாவில் ரசாயன தாக்குதல் நடத்த பாகிஸ்தான் திட்டம்? - ஆபத்தான ரிஸின், 350 கிலோ வெடிமருந்து பறிமுதல் News Lankasri
சக்திக்கு என்ன ஆனது, குணசேகரன் மறைக்கும் தேவகி யார், பல உண்மை வெளிவந்த எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
எலிமினேஷனுக்கு பிறகு அழுத முகத்துடன் வீட்டிற்கு வந்த பிக்பாஸ் 9 பிரவீன்... அடுத்து நடந்த விஷயம், வீடியோ, இதோ Cineulagam