சர்வதேச நாணய நிதியம் இலங்கை தொடர்பில் வெளியிட்டுள்ள தகவல்
இலங்கை போன்ற நடுத்தர வருமான நாடுகளுக்கு, நன்கொடையாளர்களை ஒருங்கிணைக்கும் வழிகளை தேடுவதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
அத்துடன் மிகவும் பயனுள்ள கடனைத் தீர்க்கும் பொறிமுறையை வலியுறுத்துவதாக நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிரிஸ்டிலினா ஜோர்ஜிவா தெரிவித்துள்ளார்.
இந்த தீர்வுப் பொறிமுறை, பொதுவான கட்டமைப்பு வழிகாட்டுதல்களுடன் மிகவும் கணிக்கக்கூடியதாக இருக்க வேண்டும் என்றும் அவர் செய்தியாளர்கள் மத்தியில் வலியுறுத்தியுள்ளார்.
பணியாளர் அளவிலான ஒப்பந்தம்

செப்டெம்பரில், இலங்கை சர்வதேச நாணய நிதியத்துடன் சுமார் 2.9 பில்லியன் டொலர் கடனுக்காக பணியாளர் அளவிலான ஒப்பந்தத்தை எட்டியது.
இந்த ஒப்புதல் வோஷிங்டனை தளமாகக் கொண்ட கடன் சர்வதேச நாணய நிதியத்தின் நிதியுதவியைப் பெறுவதற்கு இலங்கைக்கு முக்கிய படியாக அமைந்துள்ளது.
ஆனால், நிதி வழங்கப்படுவதற்கு முன்னர், தனது அதிக கடன் சுமையை எவ்வாறு
மறுசீரமைப்பது என்பதை இலங்கை இன்னும் இறுதி செய்யவில்லை.
தமிழக - இந்திய அரசியலை ஈழத் தமிழர் எப்படி எதிர்கொள்வது..! 15 மணி நேரம் முன்
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ரசிகர்களுக்கு சன் டிவி வெளியிட்ட குட் நியூஸ்.... என்ன தெரியுமா? Cineulagam
மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா? ஆட்சியைப் பிடிக்க அரசியல்வாதிகளின் தந்திரம் News Lankasri
வீட்டுப் பிரச்சனைக்கு சிந்தாமணி தான் காரணம் என தெரிந்ததும் அதிரடி காட்டிய விஜயா... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam