சர்வதேச மனித உரிமைகள் ஆணையத்திற்கு பணிப்பாளராகிய யாழ். இளைஞன்
சர்வதேச மனித உரிமைகள் ஆணையம் வடக்கில் தமது சேவைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.
அந்தவகையில், வடக்கில் உள்ள 60இற்கும் மேற்பட்ட இளைஞர் யுவதிகளை அங்கத்தவர்களாக இணைத்துள்ளனர் .
இதனடிப்படையில் சர்வதேச மனித உரிமைகள் ஆணையத்திற்கு பணிப்பாளராக யாழ்பாணம் சிறுப்பிட்டியை சேர்ந்த ஐான்ஆன்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், சம்பிரதாய பூர்வமாக யாழ்பாணத்தில் வரும் சித்திரை புத்தாண்டு தினத்தில் சிவில் சமூக அமைப்புகள், யாழ்.மாவட்ட உயர் நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் யாழ் மாவட்ட பொலிஸ்மா அதிபர் முன்னிலையில் ஆரம்பிக்கப்பட உள்ளதாக கொழும்பு சர்வதேச மனித உரிமைகள் ஆணையத்தின் பணிப்பாளர் எம்.பி.அட்டநாயக்க தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |