மோடியின் பயணத்தில் புலனாய்வுத்துறையின் அதிரடி நடவடிக்கை
இரண்டு நாட்கள் விஜயம் முடித்து விட்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி(Narendra Modi) இந்தியாவிற்கு சென்றுள்ளார்.
இவரின் இரண்டு நாட்கள் விஜயத்தின் போது முன்னெப்போதுமில்லாத அளவில் இலங்கையில் பலத்த பாதுகாப்பு முன்னெடுக்கப்பட்டிருந்தது.
அவர் சென்ற இடமெல்லாம் இந்திய பாதுகாப்பு அதிகாரிகள் சென்றனர்.அவர் வருவதற்கு முதல் நாள் ஒரு விமானம் மூலம் படையதிகாரிகள் வந்திறங்கியிருந்தனர்.
மோடியின் பாதுகாப்பு இந்தியாவிடமே ஒப்படைக்கப்பட்டிருந்ததை போலதான் இருந்தது.
இந்த நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்ட அதியுச்ச பாதுகாப்பை பார்க்கும் போது இந்திய அரசுக்கு அநுர குமார திசாநாயக்க மீது நம்பிக்கை இல்லாததை போல் உள்ளது என பிரித்தானிய இராணுவ ஆய்வாளர் அரூஸ் தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயங்கள் தொடர்பில் அலசி ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு..
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |