மன்னார் மாவட்ட விவசாயிகளுக்கு காப்புறுதி சான்றிதழ் வழங்கி வைப்பு
பொன் விழா நிகழ்வை முன்னிட்டு மன்னார் மாவட்ட விவசாயிகளுக்கு காப்புறுதி சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டதோடு ஒரு லட்சம் ரூபா பெறுமதியான காசோலையும் இன்று(14) வழங்கி வைக்கப்பட்டது.
மேலும், மாவட்ட செயலக வளாகத்தில் மோட்டார் வாகனங்கள் நிறுத்தும் இடத்திற்கு அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டதோடு, மரக்கன்றுகளும் நாட்டி வைக்கப்பட்டன.
அடிக்கல் நாட்டி வைப்பு
இதன்போது, மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரனின் 50ஆவது பிறந்த தின விழா மாவட்ட செயலக நலம்புரிச் சங்கத் தலைவர் செல்வகுமார் தலைமையில் மன்னார் மாவட்ட செயலகத்தில் கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்வில், மாவட்ட செயலக சிரேஷ்ட பதவி நிலை உத்தியோகத்தர்கள், பதவி நிலை உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட செயலக அனைத்து உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |