பதுளையில் பாடசாலைகளுக்கிடையே பகிர்ந்தளிக்கப்பட்ட 2000 திருக்குறள் புத்தகங்கள்

Sri Lanka Upcountry People Badulla Uva Province Sri Lankan Schools
By Uky(ஊகி) Aug 14, 2024 08:50 AM GMT
Uky(ஊகி)

Uky(ஊகி)

in சமூகம்
Report
Courtesy: uky(ஊகி)

பதுளை(Badulla) மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கிடையே மாணவர்களின் பயன்பாட்டுக்காக திருக்குறள் புத்தகங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

மலையகத்தில் உள்ள ஆறு மாகாணத்திலும் காணப்படும் பாடசாலைகளுக்கு அப்பாடசாலைகளில் கல்வி கற்று வரும் மாணவர்களின் பயன்பாட்டுக்கென திருக்குறள் புத்தகங்கள் பகிர்ந்தளிக்கும் முயற்சியின் முதற்கட்டமாக இது அமைந்துள்ளது.

இலங்கை முழுவதும் பத்தாயிரம் புத்தகங்களை கல்விச்செயற்பாட்டுக்கென பகிர்ந்தளிக்கும் தங்களின் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த முயற்சி இருப்பதாக தன்னார்வமாக புத்தகங்களை வழங்கி வைத்த தன்னார்வலர் இது தொடர்பில் தெரிவித்தார்.

பாடசாலை மாணவர்கள் திருக்குறளில் இருந்து ஒழுக்க நெறிகளை கற்றுத் தேர்ச்சி அடைய வேண்டும் என்ற நல்லெண்ணத்துடன் இந்த முயற்சி முன்னெடுக்கப்படுவதாக திருக்குறள் நூல்களை நன்கொடை செய்துள்ள தன்னார்வலர் குறிப்பிடுகின்றார்.

அடையாள அட்டைகள் தொடர்பில் பொதுமக்களுக்கு விசேட அறிவிப்பு

அடையாள அட்டைகள் தொடர்பில் பொதுமக்களுக்கு விசேட அறிவிப்பு

வழங்கப்பட்ட புத்தகங்கள் 

ஆறு மாகாணங்களில் இயங்கிவரும் 863 பாடசாலைகளில் கற்கும் இரண்டு இலட்சத்திற்கு மேற்பட்ட குழந்தைகள் திருக்குறளிலிருந்து ஒழுக்க நெறிகளை கற்கும் நோக்கோடு 2000 புத்தங்கள் ஆசிரியர்களிடம் ஒப்படைக்கப்படது.

இந்நிகழ்வானது பதுளையில் நேற்று முன் தினம்( 12.08.2024)  நடைபெற்றுள்ளது. இதனை கல்வி இராஐங்க அமைச்சர் அருணாசலம் அரவிந்தகுமாரின் வழிகாட்டலில் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

பதுளையில் பாடசாலைகளுக்கிடையே பகிர்ந்தளிக்கப்பட்ட 2000 திருக்குறள் புத்தகங்கள் | 2000 Thirukkural Books Distributed Badulla Schools

இதனால் மலையகப் பிரதேசங்கள் சார்ந்த ஆறு மாகாணங்களிலும் உள்ள பிள்ளைகள் அனைவரும் பயன்பெறுவார்கள்.

இந்த முயற்சிக்கு ஆதரவு தந்த அனைத்து உறவுகளிற்கும் கோடி நன்றிகள்.வாழ்க வளமுடன் என நன்கொடையளித்த தன்னார்வலர் யோகம் பத்மநாதன் இந்த முயற்சிக்கு ஆதரவளித்த அனைவருக்கும் தன் நன்றியினை தெரிவித்துள்ளமையும் நோக்கத்தக்கது.

நாமலின் அருகில் கோட்டாபய ராஜபக்ச

நாமலின் அருகில் கோட்டாபய ராஜபக்ச

சட்ட முரணான செயற்பாடுகள் 

உலகத்தில் அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள நூல்களில் இரண்டாவதாக திருக்குறள் அமைந்துள்ளது.

உலகத்தமிழ் மறையாக போற்றப்படும் திருக்குறளில் தேர்ந்தெடுக்கப்பட்ட திருக்குறள்களைக் கொண்ட 2000 திருக்குறள் புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்க முற்பட்ட இந்த செயற்பாடு தொடர்பில் கல்விச் சமூகம் சார்ந்த பலரும் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளனர்.

பதுளையில் பாடசாலைகளுக்கிடையே பகிர்ந்தளிக்கப்பட்ட 2000 திருக்குறள் புத்தகங்கள் | 2000 Thirukkural Books Distributed Badulla Schools

அறநெறிக் கருத்துக்களை மாணவர்களிடையே ஊட்டி வளர்க்கப்படுவதன் மூலம் நாளைய சமூகத்தில் சட்டத்துக்கு முரணான செயற்பாடுகள் நிகழ்வதை குறைத்துக்கொள்ள முடியும் எனவும் அவர்கள் மேலும் இது தொடர்பில் குறிப்பிட்டனர்.

விசா வழங்குவதற்காக கொழும்பில் அலுவலகம் நிறுவும் வீ.எப்.எஸ் குளோபல் நிறுவனம்

விசா வழங்குவதற்காக கொழும்பில் அலுவலகம் நிறுவும் வீ.எப்.எஸ் குளோபல் நிறுவனம்

அன்புப்பரிசுகள்

வாசிப்பதால் வரலாறை அறிய முடியும். நல்ல அனுபவங்களைப் பெற முடியும். தேர்ந்த ஆளுமைகளை வெளிப்படுத்திக் கொள்ள முடியும்.

வாசிப்பு என்பது தற்காலத்தில் ஏற்பட்டுள்ள அறிவியல் மேம்பாட்டால் பல்வழி கொண்டதாக இருப்பதும் நோக்கப்பட வேண்டும்.

பதுளையில் பாடசாலைகளுக்கிடையே பகிர்ந்தளிக்கப்பட்ட 2000 திருக்குறள் புத்தகங்கள் | 2000 Thirukkural Books Distributed Badulla Schools

ஆயினும் புத்தகங்களை வாசிப்பது உடலுக்கும் உள்ளத்துக்கும் அதிகளவிலான நன்மைகளை தந்துவிடும் என்பதும் புரிந்துகொள்ளப்பட வேண்டும்.

இலத்திரனியல் ஊடகங்கள் ஊடாக நூல்களை வாசிப்பதிலும் பார்க்க அச்சிட்ட புத்தகங்களை படிப்பது தொடர்பிலுள்ள அனுகூலங்களை இன்றைய இளம் சமூகம் புரிந்துகொண்டுள்ள அளவு மிகவும் குறைவாக இருப்பது கவலைக்குரிய விடயமாகும்.

ஒருவருக்கொருவர் அன்பை வெளிப்படுத்தும் நோக்கோடு பகிரப்படும் பொருட்களுள் பயனுடைய கருத்துக்களைக் கொண்ட நூல்களை அன்பளிப்பாக அன்புப்பரிசாக கொடுக்கும் பழக்கம் உருவாக்கப்பட்டு தொடரப்பட்டால் அது ஈழத்தமிழ்ச் சமூகத்திற்கு ஆரோக்கியமான நல்ல பல மாற்றங்களை தந்து நிற்கும் என்பது திண்ணம்.

சுய அரசியலுக்கான திட்டமிட்ட காய் நகர்தலே தமிழர் பொதுவேட்பாளர் விடயம்: சாணக்கியன் விசனம்

சுய அரசியலுக்கான திட்டமிட்ட காய் நகர்தலே தமிழர் பொதுவேட்பாளர் விடயம்: சாணக்கியன் விசனம்

பாதாள உலகக்குழுக்கள் நாட்டை அழிக்க இடமளிக்க முடியாது: ரணில் விக்ரமசிங்க

பாதாள உலகக்குழுக்கள் நாட்டை அழிக்க இடமளிக்க முடியாது: ரணில் விக்ரமசிங்க

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW  


மரண அறிவித்தல்

அச்சுவேலி, வெள்ளவத்தை, Pinner, United Kingdom

24 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், Morden, United Kingdom

27 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, சுன்னாகம், London, United Kingdom

27 Oct, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Den Helder, Netherlands

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், கொழும்பு, Birmingham, United Kingdom

26 Oct, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, London, United Kingdom, கொழும்பு

26 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், Montreal, Canada

25 Oct, 2020
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, Pickering, Canada

20 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Gossau, Switzerland

25 Oct, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
மரண அறிவித்தல்

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கரவெட்டி கிழக்கு, Jaffna, Barkingside, United Kingdom

25 Oct, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, சென்னை, India

19 Oct, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
மரண அறிவித்தல்
20ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US