தேர்தல்கள் ஆணைக்குழு எடுத்துள்ள நடவடிக்கை
உள்ளூராட்சி தேர்தல் சட்டம் மற்றும் செலவின ஒழுங்குமுறை சட்டம் தொடர்பில் பொலிஸ் அதிகாரிகளுக்கு அறிவிக்க தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி, இரத்தினபுரி மாவட்டத்தை மையப்படுத்தி மற்றுமொரு கட்டம் இன்று (04) நடைபெறவுள்ளது.
இதில் இரத்தினபுரி சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் கலந்து கொள்ளவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தேர்தல் பிரச்சினைகளுக்கு தீர்வு
இது தவிர தேர்தல் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது குறித்தும், பொலிஸ் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்படும்.
இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் பல கட்டங்கள் அண்மையில் பதுளை, நுவரெலியா மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களை மையப்படுத்தி, முழு நாடளாவிய ரீதியில் இந்த நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

அடேங்கப்பா முதல் நாளில் உலகம் முழுவதும் மாஸ் வசூல் வேட்டை செய்த அஜித்தின் குட் பேட் அக்லி... Cineulagam
