காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கடும் மழை!
காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டமும், கெசல்கமுவ ஓயாவின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து பெய்து வரும் கடும் மழையின் காரணமாக இவ்வாறு நீர்மட்டம் அதிகரித்துள்ளது.
இதேவேளை காசல்ரீ நீர்த்தேக்கத்தை அண்டிய பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலத்த மழை
இதற்கமைய பொகவந்தலாவ, ஹட்டன், டிக்கோயா மற்றும் நோர்வூட் ஆகிய பகுதிகளில் தொடர்ந்தும் பலத்த மழை பெய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளில் தற்போது பலத்த மழை பெய்து வருகிறது.
எனினும் இரண்டு மாதங்களாக இந்த பகுதிகளில் கடும் வறட்சி நிலவியதாகவும், இதனால் அப்பகுதி மக்களுக்குக் குடிநீர்ப் பிரச்சினை வெகுவாக காணப்பட்டதாகவும் அங்கிருக்கும் கூறப்பட்டுள்ளது.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

வெளிநாட்டு மாணவர்களுக்கு உணவு கிடையாது: உணவு வங்கிகளின் முடிவால் தவிக்கும் சர்வதேச மாணவர்கள் News Lankasri
