ரணிலை கைவிடும் மொட்டு!: வேட்பாளர் தொடர்பில் மேற்கொள்ளப்படவுள்ள தீர்மானம்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்க அல்ல. புதிய வேட்பாளரே களமிறக்கப்படுவார் என முன்னாள் ரஷ்யவுக்கான இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது,
"மொட்டுக் கட்சியின் வேட்பாளர் ரணில் அல்ல என்பது அவருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, மற்றுமொரு கட்சி, கூட்டணியில் தான் ரணிலுக்கு களமிறங்க வேண்டி வரும்.
இந்தியாவுடனான உறவு
மொட்டுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் பட்டியலில் தம்மிக்க பெரேரா இன்னும் உள்ளார். பசில், நாமல் ஆகியோருடன் அவர் ஒத்துழைப்புடன் செயற்பட்டு வருகின்றார்.
முதலில் நாடாளுமன்றத் தேர்தலை நடத்துமாறு மொட்டுக் கட்சி விடுத்த கோரிக்கையை ஜனாதிபதி ஏற்காததால், இது பற்றி ஜனாதிபதி ரணிலுக்குத் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, இலங்கையில் உள்ள அரசியல்வாதிகளுள் பசில் ராஜபக்சவுடனேயே இந்தியாவுக்குக் கௌரவமான உறவு உள்ளது” என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

பாகிஸ்தானுக்கு புதிய அச்சுறுத்தல்... மிக ஆபத்தான R-37M ஏவுகணைகளை சொந்தமாக்கும் இந்தியா News Lankasri

ஆயுத ஏற்றுமதியில் சாதனை படைத்த நாடு - ஜேர்மனி, இந்தியா உட்பட பல நாடுகள் முக்கிய வாடிக்கையாளர்கள் News Lankasri
