பொலிஸ் மா அதிபரின் சேவை நீடிப்பு இன்றுடன் நிறைவு
பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்கிரமரத்னவுக்கு இரண்டாவது முறையாக வழங்கப்பட்ட 3 மாத கால பதவி நீடிப்பானது இன்றுடன்(09.10.2023) நிறைவடையவுள்ளதாக பொலிஸ் தலைமையக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த ஜூன் மாதம் 09 ஆம் திகதி முதல் இந்த சேவை நீடிப்பை வழங்கியிருந்தார்.
2020 நவம்பரில் இலங்கையின் 35வது பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்ட சி. டி. விக்கிரமரத்ன, தனது பதவியில் இருந்து மார்ச் 25ஆம் திகதி ஓய்வுபெறவிருந்த நிலையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவருக்கு 3மாத கால பதவி நீடிப்பை வழங்கியிருந்தார்.
இரண்டாவது சேவை நீட்டிப்பு
முதல் சேவை நீட்டிப்பு நிறைவடைந்ததையடுத்து, கடந்த ஜூன் 09ஆம் திகதியின் பின் முதல் மூன்று மாத காலத்திற்கான இரண்டாவது சேவை நீட்டிப்பு வழங்கப்பட்டது.
இந்நிலையில், பொலிஸ் மா அதிபரின் சேவை முடிவடைந்த காரணத்தினால் பொலிஸ் மா அதிபர் பதவிக்கு மற்றுமொரு அதிகாரி நியமிக்கப்படுவாரா, அல்லது சி.டி. விக்கிரமரத்னவுக்கே சேவை நீடிப்பு வழங்கப்படுமா என்பது தொடர்பில் இதுவரையில் தீர்மானம் எடுக்கப்படவில்லை என பொலிஸ் தலைமையக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 6 மணி நேரம் முன்

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri

சீனாவால் இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியில் கடும் தாக்கம் - Bajaj, Ather, TVS பாதிப்பு News Lankasri

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam
