அரசாங்கம் கொள்ளையடித்த பணத்தை அப்பாவி மக்கள் செலுத்த வேண்டிய அவல நிலை (Video)
அரசாங்கம் கொள்ளையடித்த பணத்தை அப்பாவி மக்கள் செலுத்த வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது என பொதுமகன் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கம் விதித்துள்ள பெறுமதி சேர் வரி குறித்து லங்கா சிறி ஊடகத்திற்கு மக்கள் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும், இந்த வரிக்கொள்கையை நாட்டில் நடைமுறைப்படுத்துவது கடினம். மக்கள் எதிர்காலத்தில் வீதிக்கு இறங்கி போராட்டங்களை செய்யக்கூடிய வாய்ப்புகள் காணப்படுகின்றது.
வற் வரி அதிகரிப்பானது அன்றாட கூலித் தொழிலாளி முதல் அரசாங்க உத்தியோகத்தர் வரை அதிகளவு பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது.
இம்முறை விதிக்கப்பட்ட வரியை குறிப்பிட்ட பகுதியினர் மட்டுமே வரி செலுத்த போகின்றார்கள். 30 ஆயிரம் ரூபா வருமானத்தில் 32 ஆயிரம் ரூபா வரி செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக போருக்கு தயாராகும் நாடு - 800 ஏவுகணை தயாரிக்க சீனாவுடன் ஒப்பந்தம் News Lankasri
