அச்சுவேலி வல்லைப்பகுதியில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் படுகாயம் (Photos)
யாழ்ப்பாணம் - அச்சுவேலி வல்லைப்பகுதியில் காரொன்றும், மோட்டார்சைக்கிளும் மோதி விபத்திற்கு உள்ளாகியுள்ளது.
இந்த சம்பவம் இன்று காலை வல்லைப் பாலத்தின் மேல் இடம்பெற்றுள்ள நிலையில் சம்பவத்தில் படுகாயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நாட்டில் பெய்து வரும் அடைமழை காரணமாக ஏற்பட்ட வழுக்கல் நிலையினால் கார் கட்டுப்பாட்டை இழந்து மோட்டார்சைக்கிளை மோதியுள்ளதாக தெரியவருகிறது.
பொலிஸார் விசாரணை
இதனை தொடர்ந்து குறித்த கார் எதிரே உள்ள பாலத்திற்குள் விழுந்து முழுதாக சேதமடைந்துள்ளது.

மேலும் மோட்டார்சைக்கிளும் முற்றாக சேதமடைந்துள்ளதுடன், மோட்டார்சைக்கிளில் பயணித்தவர் தூக்கி வீசப்பட்டுள்ள நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 20 மணி நேரம் முன்
கடன் விஷயத்தில் முத்து-மீனா செய்த காரியம், ஷாக்கில் ரவி, ஸ்ருதி... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
அடுத்த டிராமாவை போட்ட குணசேகரன், ஈஸ்வரி கேட்ட கேள்வி, ஷாக்கில் குடும்பம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
சாலிகிராமம் வீட்டை இடிக்கும் விஜய்... அடுத்தடுத்து சொத்துக்களை இழக்கும் விஜய்! காரணம் என்ன? Manithan
ட்ரம்ப் நிகழ்ச்சி துப்பாக்கிதாரியின் கொலைப்பட்டியல்... விடுபட்டிருந்த ஒரு முதன்மை அதிகாரியின் பெயர் News Lankasri
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri