எரிபொருள் நிரப்பு நிலையங்களில் சில முக்கிய தரப்பினருக்கு முன்னுரிமை! மின்சக்தி அமைச்சர் தகவல்
இலங்கை போக்குவரத்து சபை எரிபொருள் நிரப்பு நிலையங்களில் சில முக்கிய தரப்பினருக்கு நாளை முதல் முன்னுரிமை அடிப்படையில் எரிபொருள் வழங்க வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இதன்படி தனியார் பேருந்துகள், பாடசாலை மாணவர்களை ஏற்றிச்செல்லும் வாகனம் மற்றும் சுற்றுலாத்துறையில் ஈடுபடும் வாகனங்களுக்கு இவ்வாறு எரிபொருள் வழங்கப்பட்டுள்ளது.
தனியார் பேருந்து சேவைகளுக்கு கடும் பாதிப்பு
இதற்கமைய, குறித்த நபர்கள் தங்களுக்கு அருகில் உள்ள இலங்கை போக்குவரத்து சபை எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியும் எனவும், இதற்கான சகல ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இதேவேளை, டீசல் தட்டுப்பாடு காரணமாக தனியார் பேருந்து சேவைகளுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

வடிவேல் பாலாஜி போல் கெட்டப் போட்டு மாறிய அவரது மகன் ஸ்ரீகாந்த்.. இதோ புகைப்படத்தை பாருங்க Cineulagam

6 மாடி கட்டிடத்தின் ரகசிய அறை: பெரும் பணக்காரர்கள் பாதுகாக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri

பாகிஸ்தானுக்கு பெரும் சிக்கல்.... 200 கி.மீ நீள கால்வாய்: தண்டிக்க திட்டமிடும் இந்தியா News Lankasri
