இலங்கையில் ஏற்படும் கொவிட் மரணங்கள் தொடர்பில் வெளியான தகவல்
இலங்கையில் கொவிட் வைரஸ் தொற்றால் உயிரிழப்பவர்களை தகனம் செய்வதற்கான செலவை அரசாங்கம் ஏற்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரனசிங்க தெரிவித்துள்ளார்.
கொவிட் மரணங்கள் தகனம் செய்வதற்காக செல்வாகும் 5000 ரூபாய் பணத்தை அரசாங்கத்தின் மூலம் ஏற்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய கடந்த ஒகஸ்ட் மாதம் 31ஆம் திகதி இடம்பெற்ற 2417 மரணங்களுக்காக அரசாங்கத்தினால் 120 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடு முழுவதும் அனைத்து மாகாணங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அந்த பணம் செலவிடப்பட்டுள்ளதாக ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு மரணங்களுக்கும் 5000 ரூபாய் வரையில் செலவிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.