மகிந்த தொடர்பில் வெளியான தகவல்! பட்டாசு கொளுத்தி ஆரவாரம் செய்த போராட்டக்காரர்கள் (PHOTOS)
பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவியை இராஜினாமா செய்ததாக வெளியான தகவலையடுத்து, அலரி மாளிகைக்கு முன்பாக பட்டாசுகள் கொளுத்தி போராட்டக்காரர்கள் ஆரவாரம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மகிந்த ராஜபக்ச தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், அவை உண்மைக்கு புறம்பான தகவல் என பிரதமர் அலுவலகம் மறுப்பு தெரிவித்திருந்தது.
இந்நிலையில், அலரிமாளிகைக்கு முன்பாக கடந்த சில நாட்களாக மைனா கோ கம என்ற பெயரில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில்,மகிந்த தொடர்பில் வெளியான போலி தகவலையடுத்து பட்டாசு கொளுத்தி போராட்டக்காரர்கள் ஆரவாரம் செய்துள்ளனர்.
இதன்போது பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆகியோர் உடனடியாக பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி அலரி மாளிகைக்கு முன்பாக பாரம்பரிய முறையிலான வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, பிரதமரின் தனிப்பட்ட ஊழியர்களும், பிரதமரின் வசம் உள்ள ஏனைய அதிகாரிகளும் அலரிமாளிகையை விட்டு வெளியேறத் தயாராகி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.





இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

யாழ்.மண்ணில் சாத்தான் அநுரகுமார திசாநாயக்க ஓதும் வேதம் 14 மணி நேரம் முன்

மனைவியை விட்டுவிட்டு உக்ரைன் அழகியுடன் ஓட்டம் பிடித்த பிரித்தானியர்... நாடுகடத்த விரும்பும் மக்கள் News Lankasri

பிரித்தானிய நிதியமைச்சர் பதவியை ராஜினாமா செய்த ரிஷி யார்? மகாராணியை விட அதிக சொத்து கொண்ட அவர் மனைவி News Lankasri
