எரிவாயு நிறுவனம் அறிமுகப்படுத்திய புதிய கொள்கலன் பண்புகள் தொடர்பில் வெளியான தகவல்
நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை நடத்திய சோதனையில், லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிமுகப்படுத்திய புதிய பிரீமியம் கலப்பின 18 லீட்டர் எரிவாயு கொள்கலனில் பழைய கொள்கலனின் அதே வேதியியல் பண்புகள் உள்ளன என்பது தெரியவந்துள்ளது.
எனினும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட கொள்கலன் திறன் வாய்ந்தது என்று நிறுவனம் கூறிவந்ததாக நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையின் நிர்வாக இயக்குனர் துஷன் ஜயவர்தன கூறியுள்ளார் .
12.5 கிலோ எடையுள்ள பழைய கொள்கலனில் 80 வீத பியூட்டேன் மற்றும் 20 வீத புரோபீன் இருப்பதாகவும், புதிய கொள்கலனில் 50 வீத அல்லது 60 வீத பியுட்டேன் மற்றும் 40 அல்லது 50 வீத புரோபீன் என்ற அளவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்திருந்தது .
இருப்பினும், மொரட்டுவ பல்கலைக்கழகம் நடத்திய சோதனையில், புதிய கொள்கலன் பழைய கொள்கலனில் பழைய கொள்கலனைப் போன்றே 50 வீத பியுட்டேன் மற்றும 50 வீத புரோபீன் போன்ற இரசாயன பண்புகளும் உள்ளன என்பது தெரியவந்துள்ளது.
எனவே விளம்பரங்களை வெளியிடுவதன் மூலம் நிறுவனம் நுகர்வோரை தவறாக வழிநடத்தியுள்ளதாகவும், நுகர்வோரை ஏமாற்றுகிறது என்ற வகையில் நிறுவனம் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜெயவர்தன கூறினார்.
அரசியல் செல்வாக்கு காரணமாக சட்ட நடவடிக்கை தாமதமானது என்று கருதப்படுவதாக
அவர் கூறியுள்ளார் .அவர்கள் செய்த தவறுகளை சரி செய்ய நிறுவனத்திற்கு போதுமான நேரம்
வழங்கப்பட்டதாகவும், எனினும் எதையும் சரி செய்ய நிறுவனம் தவறிவிட்டது என்றும் >நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையின் நிர்வாக இயக்குனர் துஷன் ஜயவர்தன
கூறியுள்ளார்.