க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை! வடக்கு மாணவர்களின் நலன் கருதி அமைச்சர் எடுத்துள்ள நடவடிக்கை
நாடளாவிய ரீதியில் தற்போது க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை நடைபெற்று வருகின்ற நிலையில் யாழ்ப்பாணம் (Jaffna) மற்றும் கிளிநொச்சி (Kilinochchi) மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்தாதவர்களின் மின் இணைப்புக்களை துண்டிக்காது நெகிழ்வுப் போக்குடன் செயற்படுமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் முன்வைக்கப்பட்ட ஆலோசனைக்கு சாதகமான பதில் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வடக்கு மாகாண மின்சார சபையின் பணிப்பாளர் மற்றும் யாழ் மாவட்ட மின்சார சபையின் பொது முகாமையாளர்களுடன் நேற்று (09.05.2024) மாலை அமைச்சரின் யாழ்ப்பாண அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின்போதே மேற்படி விடயம் கலந்துரையாடப்பட்டடு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய மின்பிறப்பாக்கி
இந்த பரீட்சை காலத்தின் போது மின் கட்டணம் செலுத்தாதவர்களின் மின் இணைப்புகளை துண்டிக்கும் செயற்பாடுகளை துறைசார் தரப்பினர் அண்மையில் முன்னெடுத்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த பரீட்சைகள் நிறைவடையும் வரையில், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் மின்னிணைப்புகளை துண்டிப்பதில் நெகிழ்வுப் போக்கை பின்பற்றுவது மாணவர்களின் நலன்களை பாதுகாக்கும் ஒரு செயற்பாடாக அமையும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் (Douglas Devananda) ஆலோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்தே சம்மந்தப்பட்ட தரப்புக்களினால் குறித்த ஆலோசனை
ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், நெடுந்தீவில் ஏற்படும் மின்சார பிரச்சினைக்கு தீர்வினை காண புதிய மின்பிறப்பாக்கி ஒன்றினை உடனடியாக வழங்குவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 4 நாட்கள் முன்

சீரியல் நாயகர்கள் அனைவரும் ஒரே மேடையில், அமர்க்களமான அரங்கம்... ஜீ தமிழ் குடும்ப விருதுகள் முன்னோட்டம் Cineulagam

20 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன இளம் பெண்: பிரித்தானியாவில் கண்டெடுக்கப்பட்ட எச்சங்கள் News Lankasri

வீட்டைவிட்டு கிளம்பும் முன் கோமதிக்காக மீனா செய்த காரியம், ஆனால் செந்தில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam

சேரனை தேடி அலையும் தம்பிகள், போலீஸ் நிலையத்தில் கதறி அழும் சோழன், கடைசியில்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
