2010இல் மஹிந்தவிற்கும் இதுவே நடந்தது - வரலாற்றை நினைவுப்படுத்தும் சரத் வீரசேகர
நாமலுக்கு போன்றே 2010இல் மஹிந்த ராஜபக்சவுக்கும் இவ்வாறே எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டதாக முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
உலகின் மிகக் கொடிய பயங்கரவாதத்தை தோற்கடித்து, ஈழக் கனவைத் தகர்த்ததால் ராஜபக்ச குடும்பத்தின் மீது அவர்கள் தீராத கோபத்தில் உள்ளனர் எனவும் கூறியுள்ளார்.
இன்று (26.02.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்தே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், ஒக்ஸ்போர்டு மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களில் உரை நிகழ்த்த நாமல் ராஜபக்சவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் தமிழ் மாணவர் அமைப்புகளின் அழுத்தத்தால் அது இரத்து செய்யப்பட்டுள்ளது.
தமிழ் மாணவர் சங்கங்கள் எதிர்ப்பு
பேச்சு சுதந்திரம் மற்றும் விவாத சுதந்திரத்தைப் போற்றும் இந்தப் பல்கலைக்கழகங்கள், பிரிவினைவாத தமிழ் மாணவர் அமைப்புகளுக்கு பணிந்து அந்த கலாசாரத்தையே காட்டிக்கொடுத்துள்ளன. நாமல் ராஜபக்சவின் ஆளுமைக்கு முன்னால் முதுகெலும்பை நிமிர்த்தி நின்று கேள்வி கேட்க முடியாத தமிழ் மாணவர் சங்கங்களே இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.

இந்த அரசாங்கம் புலம்பெயர் தமிழ் அமைப்புகளை திருப்திப்படுத்தவே செயற்படுகிறது. அதனால்தான் ஜனாதிபதி 'ரணவிரு' என்ற வார்த்தையைப் பயன்படுத்தக் கூட அஞ்சுகின்றார். சுதந்திர தினத்தில் இராணுவக் கருவிகளைக் காட்சிப்படுத்தாததும் இவர்களைத் திருப்திப்படுத்துதற்காகவே ஆகும். 2010இல் மஹிந்த ராஜபக்சவுக்கும் இவ்வாறே எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.
உலகின் மிகக் கொடிய பயங்கரவாதத்தை தோற்கடித்து, ஈழக் கனவைத் தகர்த்ததால் ராஜபக்ச குடும்பத்தின் மீது அவர்கள் தீராத கோபத்தில் உள்ளனர். தமிழ் மாணவர் சங்கங்கள் நாமல் ராஜபக்சவிடம் கேள்வி கேட்க தைரியம் இல்லாமல் போனது குறித்து வெட்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
இறக்குமதி செய்யப்பட்ட ரசாயனம் சேப்பாக்கம் மைதானத்தில் தெளிப்பு! வாழ்வா சாவா போராட்டத்தில் இந்தியா News Lankasri