தென்னை பயிர்ச்செய்கையில் பரவும் நோய் தாக்கம்! மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்(Photos)
கிளிநொச்சி-தர்மபுரம் பகுதியில் தெங்கு செய்கையில் ஏற்பட்டுவரும்
பாதிப்பு தொடர்பில் கள ஆய்வொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண பிராந்திய முகாமையாளர் தேவராஜா வைகுந்தன் தெங்கு பாதிப்பு தொடர்பில் இந்த கள ஆய்வை மேற்கொண்டுள்ளார்.
இது தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைவாக அப்பகுதிக்கு இன்றைய தினம்(14.06.2023) குறித்த குழு விஜயம் மேற்கொண்டிருந்தது.
இதன்போது நோய் தாக்கம் ஏற்பட்டுள்ள தென்னைகளை பார்வையிட்டதுடன், அதற்கான தீர்வு தொடர்பில் ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்துள்ளனர்.
பிரச்சினைக்கான தீர்வு
தென்னை பயிர்ச்செய்கை சபையின் யாழ்ப்பாண பிராந்திய முகாமையாளர் தேவராஜா கருத்து தெரிவிக்கையில், குறித்த பகுதியில் ஒருவகையான நோய் தாக்கம் ஏற்பட்டு வருவதை காணக்கூடியதாக உள்ளது.
அதற்கு முறையான பசளையிட்டு நீர்பாய்ச்சுதல் அவசியமானது.
தென்னம்பிள்ளைகளின் பச்சையங்களை வெள்ளை பூச்சிகள் உருஞ்சுவதாகவும், அதனால் இவ்வாறான தாக்கம் ஏற்படுவதாகவும் அவர் தெரிவித்தார். அவற்றை கட்டுப்படுத்த முடியும் எனவும், இதன் தாக்கத்தினால் தெங்கு உற்பத்தியில் பாதிப்பு ஏற்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
குறித்த நோய்த் தாக்கம் தொடர்பில் தர்மபுரம் பகுதியில் தெங்கு உற்பத்தியில் ஈடுபடும் மக்களுக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |