மலேசிய வனப்பகுதியில் மறைந்திருந்த இந்தோனேசிய குடியேறிகள் கைது
மலேசியாவின் ஜோஹோர் மாநிலத்தில் இருக்கும் டேங்கரோஹ் பகுதியில் உள்ள வனப்பகுதியில் மறைந்திருந்த இந்தோனேசியாவைச் சேர்ந்த 12 ஆவணங்களற்ற குடியேறிகள் மலேசியப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் கைது செய்யப்பட்ட அனைவரும் ஆண்கள் எனவும் அவர்கள் 19 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவிட் பரிசோதனைக்கு உட்படுத்தியதில் அவர்கள் எவருக்கும் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த கைதின் போது வனப்பகுதியில் பிற குடியேறிகள் விட்டுப்போன உடைமைகளைப்
பரிசோதித்ததில் அதிலிருந்து போதைப்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.