இந்தோனேசியாவில் கருவிலேயே விற்கப்படும் குழந்தைகள்!
சிங்கப்பூரில் 2023 ஆம் ஆண்டு 25 குழந்தைகளை விற்பனை செய்து மோசடியில் ஈடுபட்ட கடத்தல் கும்பலை இந்தோனேசிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இதில், சில குழுந்தைகளுக்கு கருவிலேயே தத்தெடுக்கப்பட்டு குழந்தை பிறப்பிற்கான செலவுகள் தீர்த்த பின்னர் விற்பனை செய்யப்பட்டுள்ள அதிர்ச்சி தகவல்களும் வெளிவந்துள்ளன.
கும்பல் கைது
இந்தோனேசியாவின் இரண்டு நகரங்களில் 13 பேரை பொலிஸார் கைது செய்து, கடத்தப்படவிருந்த சுமார் ஒரு வயதுடைய ஆறு குழந்தைகளை மீட்டுள்ளனர்.

இந்த கும்பல் குழந்தைகளை வைத்திருக்க விரும்பாத பெற்றோர்கள் அல்லது கர்ப்பிணிப் பெண்களை குறிவைத்து, பெரும்பாலும் வட்ஸ்அப்பில் குறுஞ் செய்திகளை அனுப்பி பேஸ்புக்கில் தொடர்பை ஆரம்பிப்பதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தக் குழுவில் குழந்தைகள் தொடர்பான தகவல்களைத் தேடுபவர்கள், அவர்களைப் பராமரிக்க வீடு வழங்குபவர்கள், போலி ஆவணங்களை செய்பவர்கள் ஆகியோர் அடங்குவர்.
பொலிஸார் கைது
குழந்தைகள் அவர்களின் தாய்மார்களிடமிருந்து எடுக்கப்பட்டு, இரண்டு முதல் மூன்று மாதங்களுக்கு வளர்ப்பு பெற்றோரிடம் கொடுக்கப்பட்டு, பின்னர் ஜகார்த்தாவிற்கு கொண்டு வரப்பட்டு பிறப்புச் சான்றிதழ்கள், கடவுசீட்டுக்கள் மற்றும் ஏனைய ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு அனுப்பப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஒவ்வொரு குழந்தையும் 11 முதல் 16 மில்லியன் இந்தோனேசிய ரூபாய்க்கு ($673–£502) விற்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சுமார் 12 ஆண் குழந்தைகள், 13 பெண் குழந்தைகளை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்ட கும்பல் தெரிவித்துள்ளது.
மேற்கு ஜாவா உட்பட இந்தோனேசியாவின் பல்வேறு நகரங்கள் மற்றும் மாவட்டங்களைச் சேர்ந்த பெற்றோருக்குப் பிறந்த குழந்தைகளே விற்கப்பட்டுள்ளன.
சிங்கப்பூருக்கு கொண்டு செல்லப்பட்ட குழந்தைகளின் பாதுகாவலர்களைக் கண்டுபிடிப்பதே தங்களின் அடுத்த கட்ட நடவடிக்கை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உலகின் எந்த சக்தியாலும் கொல்ல முடியாத தளபதிகளில் ஒருவர்... மரணத் தண்டனையை நிறைவேற்றிய ஈரான் News Lankasri
எஞ்சிய ஆறு வெடிகுண்டுகள்... ஈரான் போருக்கு நடுவே ட்ரம்பிற்கு பறந்த அந்த அதிர்ச்சி தகவல் News Lankasri