பிரான்ஸ் நிறுவனத்தின் உலகளாவிய தலைமை நிர்வாகியாக பொறுப்பேற்கும் இந்திய பெண்
உலகின் புகழ்பெற்ற மற்றும் போற்றப்படும் நிறுவனமான பேஷன் சேனலின் குளோபல் தலைமை நிர்வாக அதிகாரியாக இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த பெண் லீனா நாயர் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜெம்ஷத்பூரில் உள்ள எக்ஸ்.எல்.ஆர்.ஐ கல்வி நிறுவனத்தில் தனது படிப்பை முடித்த இவர் 1992-ம் ஆண்டில் ஆங்கிலோ-டச்சு எஃப்எம்சிஜி நிறுவனமான யுனிலீவர் நிறுவனத்தில் பணியில் சேர்ந்துள்ளார்.
அந்நிறுவனத்தின் முதல் பெண் மற்றும் இளைய தலைமை மனித வள அதிகாரியாக பொறுப்பேற்று கடந்த 30 ஆண்டுகளாக பணியாற்றி வந்த நிலையில், வரும் ஜனவரி முதல் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இந்நிலையில், பிரெஞ்சு சொகுசு பேஷன் ஹவுஸ் சேனலின் உலகளாவிய தலைமை நிர்வாகியாகவும் அவர் பொறுப்பு ஏற்கவுள்ளார்.
"உலகின் புகழ்பெற்ற மற்றும் போற்றப்படும் நிறுவனமான பேஷன் சேனலின் குளோபல் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டதில் பணிவும்,பெருமையும் அடைகிறேன்" என்று லீனா நாயர் தெரிவித்துள்ளார்.
ரவி-நீது பிரச்சனையில் ஸ்ருதி எடுத்த அதிரடி முடிவு, பிரச்சனையில் குடும்பம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு எபிசோட் Cineulagam
பல வருடங்களுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபலங்கள்... யார் யார் பாருங்க Cineulagam
போலீஸில் தப்பித்த ஜனனியால் கலெக்டருக்கு ஏற்பட்ட சிக்கல், குணசேகரன் அடுத்த பிளான்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam