மாலைத்தீவிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட இந்திய படையினர்
மாலைத்தீவில் (Maldives) நிலைகொண்டிருந்த 51 இந்திய படைவீரர்களும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக மாலைத்தீவு அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்திய (India) ஜனாதிபதி அலுவலகத்தின் பிரதான பேச்சாளர், குறித்த படையினர் நாடு திரும்பியுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளார்.
இருப்பினும், மாலைத்தீவில் நிலைகொண்டிருக்கும் இந்திய வீரர்களின் சரியான எண்ணிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை.
ஜனாதிபதி தேர்தல்
அதேவேளை, மாலைத்தீவில் உள்ள டோர்னியர் விமானம் மற்றும் உலங்கு வானூர்திகளை நிர்வகிப்பதற்கு இந்தியாவிலிருந்து சிவிலியன் நிபுணர்களை பணியமர்த்துவதற்காக இரண்டு நாடுகளும் இணங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், மாலைத்தீவிலிருந்து இந்திய படையினர் திருப்பி அனுப்பப்பட்டதற்கு காரணம் அந்நாட்டு ஜனாதிபதியின் தேர்தல் பிரசாரத்தின் ஒரு மூலக்கல்லாக இருக்கலாம் என கூறப்படுகின்றது.
இதன்படி, மாலைத்தீவு ஜனாதிபதியின் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து உடனடியாக இந்திய இராணுவ படையினரை திரும்பப் பெறுமாறு கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
போலீசாரால் கைது செய்யப்பட்ட பல்லவன், ஷாக்கில் சகோதரர்கள்... அய்யனார் துணை பரபரப்பு புரொமோ Cineulagam
சரவணன் சொன்ன வார்த்தை குமுறலில் மயில் எடுத்த அதிரடி முடிவு, ஷாக்கான மீனா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோட் Cineulagam
காமெனியின் படுகொலை... உலகம் மொத்தம் பீதியை ஏற்படுத்திய ஈரானிய மூத்த மதகுருவின் அழைப்பு News Lankasri
இலங்கை அருகே... ஈரான் கப்பல் மீது நீர்மூழ்கியால் தாக்குதல் நடத்தியதை அறிவித்த அமெரிக்கா News Lankasri