சிறீதரன் - மாவை மற்றும் பல தமிழ் தலைவர்களுடன் இந்தியா முக்கிய கலந்துரையாடல்

Sri Lankan Tamils General Election 2024 Parliament Election 2024 Sri Lanka Parliament Election 2024
By Benat Sep 30, 2024 10:15 PM GMT
Report

புதிய இணைப்பு

தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகருக்கும் இடையிலான சந்திப்பு நேற்றைய தினம் நிறைவு பெற்றிருந்தது. 

இந்நிலையில், குறித்த சந்திப்பின் போது கடந்த காலங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகச் செயற்பட்டபோது எங்களுக்குக் கசப்பான அனுபவங்கள் உள்ளன. இருந்தாலும் அவை தொடர்பில் பேசி கூட்டாகப் போட்டியிட முயற்சிகள் எடுப்போம் என தமிழரசு, ரெலோ, புளொட் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப். ஆகிய கட்சிகளின் தலைவர்கள் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜாவிடம் தெரிவித்துள்ளனர். 

அதேவேளை, நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கட்சிகளின் நிலைப்பாடு தொடர்பில் இந்தியத் தூதுவர் அவர்களிடம் கேட்டறிந்து கொண்டுள்ளார். 

சிறீதரன் - மாவை மற்றும் பல தமிழ் தலைவர்களுடன் இந்தியா முக்கிய கலந்துரையாடல் | Indian Political Figure Meets Tamil Parties

இதன்போது, அவருக்குப் பதிலளித்த தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள், "நாடாளுமன்றத் தேர்தலைத் தமிழ்த் தேசியக் கட்சிகள் தனித்தனியாக எதிர்கொள்வதால் வாக்குகள் சிதறடிக்கப்படும். இதனால், பிரதிநிதித்துவத்தை இழக்காத வகையில் ஒன்றாகப் போட்டியிடவே விரும்புகிறோம்.

எனினும், இது உடனடியாகச் சாத்தியமில்லை. கடந்த காலங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகச் செயற்பட்ட போது எங்களுக்குக் கசப்பான அனுபவங்கள் உள்ளன. இருந்தாலும் அவை தொடர்பில் பேசி கூட்டாகப் போட்டியிட முயற்சிகள் எடுப்போம்" என குறிப்பிட்டுள்ளனர். 

நேற்று பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பித்த இந்தச் சந்திப்பு சுமார் ஒன்றரை மணிநேரம் நீடித்திருந்தது.

இந்தச் சந்திப்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் ப.சத்தியலிங்கம், தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், ரெலோ கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், புளொட் கட்சியின் தலைவர் த.சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

செய்தி - ராகேஷ் 

தமிழரசுக் கட்சி கொழும்பில் போட்டியிடுவது தொடர்பில் பரிசீலிப்பு

தமிழரசுக் கட்சி கொழும்பில் போட்டியிடுவது தொடர்பில் பரிசீலிப்பு

இரண்டாம் இணைப்பு

தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகருக்கும் இடையிலான இன்றைய சந்திப்பு நிறைவடைந்துள்ளது.

எனினும், அங்கு கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் எவ்வித தகவல்கள் வெளியிடப்படவில்லை.

கூட்டம் நிறைவடைந்தவுடன் தமிழ்  அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் அனைவரும் விரைவாக அவ்விடத்தில் இருந்து சென்று விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

முதலாம் இணைப்பு

தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று தற்போது கொழும்பில் இடம்பெற்று வருகின்றது. 

நாட்டில் பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டு  அது தொடர்பான நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்தக் கலந்துரையாடல் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகின்றது.  

உகண்டாவுக்கு டொலர்களை கடத்திய ராஜபக்சர்கள்! புதிய அரசாங்கத்திற்கு வேலை கொடுக்கும் மொட்டு

உகண்டாவுக்கு டொலர்களை கடத்திய ராஜபக்சர்கள்! புதிய அரசாங்கத்திற்கு வேலை கொடுக்கும் மொட்டு

முக்கிய கலந்துரையாடல் 

கொழும்பில் உள்ள இந்த தூதரகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்று வருகின்றது. 

சிறீதரன் - மாவை மற்றும் பல தமிழ் தலைவர்களுடன் இந்தியா முக்கிய கலந்துரையாடல் | Indian Political Figure Meets Tamil Parties

இந்த சந்திப்பில், இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, பதில் பொதுச் செயலாளர் சத்தியலிங்கம், தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன், டெலோ அமைப்பினுடைய தலைவர் செல்வம் அடைக்கலநாதன், ப்ளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன், ஈபிஆர்எல்எப் இன் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். 

இது அடுத்த தேர்தலில் தமிழ் தரப்பினர் அனைவரையும் இணைத்து  களம் காண வைப்பதற்கான முயற்சியாக இருக்கின்றது என அரசியல் பரப்பில் பேசப்படுகின்றது.  

இந்திய வெளிவிவகார அமைச்சரின் விஜயம்

இதேவேளை நாட்டில் ஆட்சி மாற்றம் இடம்பெற்றுள்ள நிலையில் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் எதிர்வரும் நான்காம் திகதி இலங்கைக்கு ஒரு நாள் விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

சிறீதரன் - மாவை மற்றும் பல தமிழ் தலைவர்களுடன் இந்தியா முக்கிய கலந்துரையாடல் | Indian Political Figure Meets Tamil Parties

இந்திய வெளிவிவகார அமைச்சரின் இலங்கை விஜயத்தின்போது ஜனாதிபதி அநுரகுமாரதிசநாயக்கவுடன் பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளது.

முன்னதாக அநுரகுமார திஸாநாயக்க புதுடெல்லிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த போது இந்திய வெளிவிவகார அமைச்சரை சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

இந்த நிலையில் இந்திய வெளிவிவகார அமைச்சரின் இலங்கை விஜயத்தின்போது இந்தியாவின் உதவியுடன் முன்னெடுக்கப்படும் பல்வேறு திட்டங்கள் குறித்து கவனம் செலுத்தப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை இந்திய இந்திய வெளிவிவகார அமைச்சரின் இலங்கை விஜயத்தின்போது பிரதமர் கலாநிதி ஹரணி அமரசூரிய மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோட்டாபய செய்ததையே அநுரகுமாரவும் செய்வதாக அளுத்கமகே கடுமையான விமர்சனம்

கோட்டாபய செய்ததையே அநுரகுமாரவும் செய்வதாக அளுத்கமகே கடுமையான விமர்சனம்

ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் தனியார் மயத்திட்டம் தொடர்பாக அநுர அரசாங்கத்தின் முடிவு

ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் தனியார் மயத்திட்டம் தொடர்பாக அநுர அரசாங்கத்தின் முடிவு

1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Villeneuve-Saint-Georges, France

20 Sep, 2024
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Toronto, Canada

14 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், துன்னாலை, வல்வெட்டி, துணுக்காய், கொழும்பு, வவுனியா

20 Sep, 2015
மரண அறிவித்தல்

மட்டுவில், Stockholm, Sweden

30 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
கண்ணீர் அஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

17 Sep, 2000
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், தண்ணீரூற்று, St. Gallen, Switzerland

18 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

28 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில், Vaughan, Canada

19 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொழும்பு, Kokuvil, Scarborough, Canada

16 Sep, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மதவுவைத்தகுளம், பாவற்குளம், கரம்பைமடு

16 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Ikast, Denmark, Toronto, Canada

17 Sep, 2021
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

13 Sep, 2025
35ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

செட்டிக்குளம், Vitry-sur-Seine, France

13 Sep, 2025
மரண அறிவித்தல்

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 6ம் வட்டாரம், Mississauga, Canada

12 Sep, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில், Wembley, United Kingdom

13 Sep, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், Muscat, Oman, தாவடி, கொழும்பு, Melbourne, Australia

12 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Bushey, United Kingdom

13 Sep, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், Aubervilliers, France

04 Sep, 2025
மரண அறிவித்தல்

மாத்தறை, அரியாலை, கொழும்பு, Harrow, United Kingdom

11 Sep, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US