இலங்கையில் IORA மாநாடு - 23 நாடுகளில் வெளிவிவகார அமைச்சர்கள் பங்கேற்பு
இந்திய பெருங்கடல் வட்டார (IORA) மாநாடு ஒக்டோபர் 11 ஆம் திகதி கொழும்பில் ஆரம்பமாக உள்ளது.
இந்நிலையில், இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 23 வெளிவிவகார அமைச்சர்கள் கொழும்புக்கு வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெய்சங்கர் உட்பட ஆசிய, ஆபிரிக்க நாடுகளின் பல வெளிவிவகார அமைச்சர்கள் மாநாட்டில் கலந்துக்கொள்ள உள்ளனர்.
உலக பொருளாதார வழிமுறை
23 பிரதான நாடுகளை தவிர IORA மாநாட்டில் கண்காணிப்பு மட்டத்தில் மேலும் 10 நாடுகள் கலந்துகொள்ள உள்ளன.
இதில் அமெரிக்கா, சீனா, ரஷ்யா, ஜப்பான், எகிப்து ஆகிய நாடுகளும் அடங்கும்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெறும் IORA மாநாட்டில் உலக பொருளாதார வழிமுறைகளை உருவாக்குதல், பிராந்தியத்திற்கு பொதுவான சவால்களை வெல்வது, சுற்றுலா, கலாசார துறைகளில் முன்னேற்றத்திற்கான திட்டங்களை போன்ற பிரதான விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.
IORA மாநாடு ஒக்டோபர் மாதம் 11 ஆம் 12 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2026
தவெக பல தொகுதிகளில் முன்னிலை வகித்தாலும்..! 10 தொகுதிகளின் நிலவரம் - இறுதி முடிவுகளில் மாற்றங்கள் ஏற்படும் வாய்ப்பு
அதிரவைக்கும் வாக்கு எண்ணிக்கை..! முன்னிலை வகிக்கும் தவெக - வேட்பாளர்களை பாதுகாக்க விஜய் அவசர ஏற்பாடுகள்