காசா யுத்தம் சர்வதேச கடல் பாதுகாப்பில் கடும் தாக்கம்: ரணில் எச்சரிக்கை
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன யுத்தமானது, சர்வதேச ரீதியான கடல் பாதுகாப்பில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதால் மத்திய கிழக்கு நாடுகளுடனான இலங்கையின் அணுகுமுறை மிக முக்கியமானது என்பதையும் ரணில் விக்ரமசிங்க எடுத்துரைத்துள்ளார்.
தனியார் ஹோட்டல் ஒன்றில் இன்று (28.02.2024) இடம்பெற்ற இந்து சமுத்திரத்தின் பாதுகாப்பு தொடர்பான கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
அணுகுமுறையின் அவசியம்
இந்து சமுத்திரத்தில் நிலவும் அதிகாரப் போட்டிக்கு மத்தியில் இலங்கையின் சுதந்திரத்தை நிலைநிறுத்துவது அவசியம் ஆகும்.
சுயஸ் கால்வாயில் 1967ஆம் ஆண்டு இடம்பெற்ற ஆறு வருட யுத்தத்தின் பாதிப்பு கொழும்பு துறைமுகத்தில் சுமார் 10 வருடகாலமாக நீடித்திருந்தது.
அதுபோல, இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன யுத்தமானது, சர்வதேச ரீதியான கடல் பாதுகாப்பில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆகவே, மத்திய கிழக்கு நாடுகள் முதல் இந்தோனேசியா வரையான நாடுகளுடனான அணுகுமுறை மிக முக்கியமானது என்பதையும் ரணில் விக்ரமசிங்க எடுத்துரைத்துள்ளார்.
இந்து சமுத்திரத்தின் எதிர்காலம்
அத்துடன், இந்து சமுத்திரத்தின் எதிர்காலமானது, இலங்கையின் பங்கு மற்றும் இந்தோ - பசிபிக் உறவிலும் தங்கியுள்ளது என நான் நம்புகின்றேன்.
மேலும், இந்தியா முதல் ஆபிரிக்கா வரையிலான நாடுகளின் பொருளாதார வளர்ச்சியில் மையப்புள்ளியாக இலங்கை செயற்படும் என்ற இலக்கும் எமக்கு உள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



ஐஸ்வர்யா லட்சுமி நிஜத்தில் என்ன வேலை செய்கிறார் தெரியுமா.. மாமன் படத்தில் அப்படி நடிக்க இதுதான் காரணமா Cineulagam

ராஜநாகங்களின் ராஜ்யம்: இந்தியாவில் மனிதர்களை விட நாகங்கள் அதிகம் வாழும் நகரம் எது தெரியுமா? Manithan

தக் லைஃப் படத்தில் சிம்பு ரோலில் முதன் முதலில் நடிக்கவிருந்த நடிகர் யார் தெரியுமா! அட இவரா Cineulagam

மருத்துவமனையில் ஏற்பட்ட சம்பவம், சீதாவை நினைக்கும் முத்து, என்ன ஆனது?.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
