இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர்
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெயசங்கர் இந்த மாதம் கொழும்புக்கு வரவுள்ளதாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி(Ali Sabry) தெரிவித்துள்ளார்.
குறித்த விஜயமானது உறுதியாகியுள்ள நிலையில் அவர் விஜயம் மேற்கொள்ளவுள்ள திகதி அறிவிக்கப்படவில்லை.
நிதி ஒத்துழைப்பு
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, சுற்றுலா மற்றும் மத்திய வங்கிகள் மற்றும் நிதியமைச்சகங்களுக்கு இடையே உள்ள நிதி ஒத்துழைப்பில் தற்போதுள்ள கூட்டாண்மைகளை மதிப்பாய்வு செய்வதே இந்த விஜயத்தின் நோக்கமாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் விரைவில் எதிர்பார்க்கப்படும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் விஜயத்துக்கான ஆயத்தங்களும் ஜெய்சங்கரின் விஜய நோக்கங்களில் அடங்குகின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
![தமிழ் மக்கள் பொதுச்சபை](https://cdn.ibcstack.com/article/112ec360-e1b9-4c9a-92e1-6d909ce10b31/24-6667861299af8-md.webp)